Thursday, October 25, 2012

மழை


மேகங்கள் தாளமிட, மின்னல் வான வேடிக்கைகள் படைக்க,
சூரியன் பூமியை வானவில் கொண்டு அலங்கரிக்க,
பூமி நோக்கி வரும் மழை என்னும் வெள்ளித்துளி
கடவுள் நமக்கு அருளிய வரம்.
அனைத்து உயிர்களின் உயிர் நாடி..
இதை அறிந்ததனால் தான் என்னவோ,
மழையினை கானமயில் ஆடி வரவேற்கிறது.
பூச்செடிகள் பூத்துக்  குலுங்கி வரவேற்கின்றன.
மான்கள் துள்ளி ஓடி வரவேற்கின்றன.
ஆனால் ஆறறிவு மனிதர்களாகிய நாம்
மழை கண்டு ஓடி ஒளிகின்றோம்,
மழை நீரை சேமிக்க மறுக்கின்றோம்,
இதனை அறிந்திருந்ததனால் சூரியன் நீர் நிலைகளிலிருந்து
நீரினை ஆவியாக்கி மேகங்களாக சேமித்துக்கொள்கிறது.
இவை, பின் குளிர்வடைந்து மழையாக வருகிறது.
ஆனால் இன்று நாம் மரங்களை வெட்டியும்,
காடுகளை அழித்தும், பூமி குளிரடைவதை
தடுத்து மழை வருவதை தடுக்கின்றோம்.
பின் தண்ணீர் கேட்டு மற்றவர்களிடம் சண்டை இடுகின்றோம்.
சற்று சிந்திப்போம், மழை நீரின் மகத்துவத்தை உணர்வோம்...
மரம் வளர்ப்போம்...மழை பெறுவோம்..
மழை பூமிக்கு வரும் பொழுது ஓடி ஒளியாமல்
வரவேற்போம்.. மகிழ்ச்சியுடன் இருப்போம் !!

(நண்பரின் குழந்தை பள்ளியில் கூறுவதற்காக எழுதியது.  இவ்வளவு பெருசா இருக்கே, ஒரு குழந்தைகிட்ட போய் வீரத்தை காட்டுறியே, பாவம் அந்த குழந்தைனு நீங்க நினைக்கிறது புரிகிறது :-))

11 comments:

  1. thambi COvaiveera! ungaLidam irundhu naan 'reservation' POndRa padhivai edhirpaarthen...

    ReplyDelete
  2. what do you think about this?

    http://img.dinamalar.com/data/uploads/WR_20121029064630.jpeg

    who knows same case for water as well! :(

    ReplyDelete
  3. உண்மை.. தண்ணீரும் அந்த நிலையில் தான் உள்ளது... நீர் நிலைகள் துர்வாரப்படுவதில்லை, மழை நீர் சேமிக்கப்படுவதில்லை.. ஒரு பொருள் இருக்கிற வரைக்கும் அதன் அருமை தெரியாது...

    ReplyDelete
    Replies
    1. edhirkaalathil POr 'thaNNeerukkaaga' thaan irukka POgiRadhu!

      Delete
  4. அன்பு நண்பா நல்ல சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே :-)

      Delete
  5. அருமையான சிந்தனை ஸ்ரீனி! மக்கள் விழித்தால் நல்லது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ :-). ஆம் !!..நித்திரை தெளிய வேண்டும்..

      Delete
  6. Aam, nee kattayam thuyilelavendum, apodhuthaan nee kooriyavatrai seyalil neeye kadaipidithu oolaayaa endru ariya mudiyum, else its just like inception movie..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அறிவுரைக்கு நன்றி !!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...