Wednesday, August 17, 2011

முதல் கவிதை (??)

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது எழுதியது. தினத்தந்தி குடும்ப மலரின் கடைசி பக்கத்தில் வெளியாகும் புதுக்கவிதைகளை பார்த்து நாமும் எழுதி அனுப்பலாமே என்று எழுதி அனுப்பிய கவிதை (??) 

சூரியன் - நிறம்
கருப்பு என்றால் உனக்கும் வெறுப்போ ??
இரவானதும் மறைகிறாயே !!
இதை என் நண்பர்களிடம் காட்டியபொழுது, 'மச்சி, கவிதையோட logic'ae தப்பு' என்றனர். அவர்கள் கூறியது உண்மை தான். சூரியன் மறைவதால் தான் இரவு வருகிறது, இரவு வருவதனால் சூரியன் மறைவதில்லை. ஆனால் இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது நமது கற்பனையை செலுத்தி நாம் கூற வரும் கருத்துக்கு வலுசேர்ப்பதே இதன் நோக்கம். இதனை இலக்கணத்தில் தற்குறிப்பேற்ற அணி என்று கூறுவர். இளங்கோவடிகள் கூட சிலப்பதிகாரத்தில் இதனை பயன்படுத்தி இருப்பார்

"
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
"
"மதுரை நோக்கி வரும் கோவலனை பார்த்து மதில் மேல் பறக்கும் கொடிகள், கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து உள்ளே வராதே என்று எச்சரித்தன" என்று காற்றில் தானாக ஆடும் கொடியின் மீது தனது கற்பனையை செலுத்தி அதன் முலம் தனது கருத்தினை கூறி இருப்பார் இளங்கோவடிகள்.

மற்றும் ஒரு எடுத்துக்காட்டு புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவில் இருந்து


"தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை

வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்

கூவினவே கோழிக் குலம்."

"நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலை ஆனதும், கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. தமயந்தியின் துயர் கண்டு தான், கோழிகள் சூரியனை விரைவாக வரக் கூறி கதறுவதாக" புகழேந்தி கூறி இருப்பார்.

இம்முறையினை தான் நானும் பின்பற்றியதாக நினைக்கிறேன். ஆனால் எனது நண்பர்களை போல தினத்தந்தியில் இருப்பவர்களும் நினைத்தார்கள் போலும் நான் அனுப்பிய இந்த கவிதைக்கு தினத்தந்தியினர் 'bulb' கொடுத்து விட்டார்கள் :-). கொஞ்சம் அதிகப்படியாகத்தான் கற்பனை செய்யது விட்டேனோ?? இருக்கலாம் :-). எனது கவிதையை தினத்தந்தியினர் வெளியிடவில்லை என்றால் என்ன?? இதோ நான் வெளியிட்டு விட்டேன் :-). நான் எழுதிய முதல் கவிதை இப்பொழுது வலை தளத்தில் :-)

இது வரை பொறுமையாக படித்ததற்கு பரிசாக நான் சமிபத்தில் ரசித்த ஒரு 'நல்ல' கவிதை :-)
"என்னவள்
ஒரு கவிதை எழுதினாள்,
கீழே கையெழுத்திட்டாள்.,
குழம்பினேன் ........
எது கவிதை என்று ....!!!!!"

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க !! :-)

Monday, August 15, 2011

இந்திய பயணம்


இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளன நான் இந்தியாவில் கால் பதிக்க :). 16 மாதங்களுக்குப் பிறகு இந்தியா செல்லவிருக்கிறேன். இத்தனை நாட்கள் எனது குடும்பத்தை, எனது ஊரை பிரிந்து இருந்தது கிடையாது. இத்தனை நாட்களும் "வேலை வேலை" என்றே பறந்து விட்டது. சற்று திரும்பி பார்க்கையில் இந்த அமெரிக்க பயணம் (சென்ற முறைக்கு நேர் மாறாக) மிகுந்த சவாலான பயணமாகவே அமைந்தது. நான் ஏப்ரல் 2010 அமெரிக்காவிற்கு வந்தேன். எனது 'Project' மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த நேரம். தினமும் 16 -17 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம். இந்தியாவில் இருக்கும் போதும் நான் அப்படி உழைத்து கொண்டு இருந்தாலும், அலுவலகத்தில் என்னுடைய சகப்பணியாளர்களுடன் ஒன்றாக உழைத்தப்படியால் அழுத்தம் கம்மியாக இருந்தது. ஆனால் அமெரிக்காவிலோ ஓநாயிடம் அகப்பட்ட ஆட்டை போல நான் எனது 'Client ' இடம் தனியாக அகப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். என் ட்டுப்பாட்டுக்கு அப்பாற்ப்பட்ட பல்வேறு காரங்களுக்காக பல 'deadline'கள் காற்றில் பறந்தன. இதனால் உண்டான 'Client Pressure', என்னுடன் வேலை பார்க்கும் (நான் எது செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்கும்) 'U.S .TechLead' Sue என்ற பெண்மணியிடம் எப்பொழுதும் சண்டை, 16 -17 மணி நேர வேலை, தனிமை என அனைத்தும் சேர்ந்து ஏப்ரல் 2010 முதல் மார்ச் 2011 வரையிலுமான காலகட்டத்தை என் வாழ்வின் மிகுந்த கஷ்டமான/ சவாலான காலமாக மாற்றியது. அழுத்தம் காரணமாக எனது மடிக்கணினியை (Laptop) தூக்கி எறிந்த நேரமும் உண்டு. திரும்பி இந்தியாவிற்கு சென்று விடலாம் என்று பல முறை தோன்றியதும் உண்டு. ஆனால் அப்படி சென்றால் எனக்கு "டாலர்" சம்பளம் கிடைக்காது. அதன் காரணமாக நான் கோவையில் கட்டி கொண்டு இருக்கும் வீடு பாதியில் நின்று விடும் என்பதற்காக பல்லை கடித்து கொண்டு இருக்க வேண்டியதாய் போயிற்று . ஆகஸ்ட் 2010இல் என் அக்காவிற்கு குழந்தை பிறந்ததும், அக்டோபர் 2010 எனது அமெரிக்க நண்பர் Paul Snyder வீட்டிற்கு சென்று 3 நாட்கள் தங்கியதும் 2010இல் மறக்க முடியாத நிகழ்வுகள். இந்த இரண்டு விஷயங்கள் தவிர 2010 முற்றிலும் மறக்க கூடிய வருடமே. ஏப்ரல் 2011இல் எங்களது Project Deliver செய்த பின் வாழ்க்கை ஒரு அளவு கட்டுப்பாட்டில் வந்தது. வேலை அழுத்தம் கொஞ்சம் கம்மியானது. வேலையை தவிர வேறு சிலவற்றிலும் கவனம் செலுத்த நேரம் கிடைத்தது . பொன்னியின் செல்வன் படித்தும், நண்பர்கள் Albert/Grace அவர்களுடன் Atlanta'வை சுற்றியுள்ள சில இடங்கள் சென்றும், மாலைகளில் நண்பர்களுடன் கிரிக்கெட்/டென்னிஸ் விளையாடியும் மே 2011 முதல் தற்போது வரையிலான காலகட்டம் கொஞ்சம் அழுத்தமின்றி சென்றது.

இப்பொழுது இந்தியாவிற்கு புறப்பட தயாராகி விட்டேன். அக்காவிற்கு மடிக்கணினி (Laptop), அப்பாவிற்கும், மாமாவிற்கும் கடிகாரங்கள், சட்டைகள், அக்காவின் குழந்தை Lekhasreeக்கு நிறைய பொம்மைகள் மற்றும் துணிகள், நண்பர்களுக்கு கைபேசி (Cellphone) மற்றும் வேறு சில 'Electronic items' என அனைவருக்கும் என்னால் முடிந்தவற்றை எடுத்து செல்கிறேன். இந்தியாவில் ஒரு மாத காலம் இருப்பேன். 16 மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திப்பது, Lekhasree இன் முதல் பிறந்த நாள், வீட்டின் புதுமனை புகுவிழா, விநாயகர் சதுர்த்தி, நெருங்கிய நண்பரின் கல்யாணம், என பல உற்சாகமான விஷயங்கள் காத்து கொண்டு இருக்கிறது. எப்படா ஆகஸ்ட் 28 காலை 7 மணி (நான் கோவை விமான நிலையத்தில் தரை இறங்கும் நேரம்) வரும் என்று காத்து கொண்டு இருக்கிறேன் :-)...
"கோவையே!! கோவை வீரன் கோவைக்கு வருகிறான்" .. ஹி ஹி :-)

Monday, August 8, 2011

திருட்டுத்தனமா?? புத்திசாலித்தனமா ??

ஆண்டு 1989 , இடம் - SBOA பள்ளி, நான் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த நேரம். அன்று எனது mid-term தேர்வுக்கான விடைத்தாள்களை கொடுப்பதாக எனது வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். அதை பற்றி அம்மாவிற்கும் தெரியும். நேரம் கடந்தது, விடைத்தாள்களை கொடுக்கும் நேரமும் வந்தது. விடைத்தாள்களும் கொடுக்கப்பட்டன. விடைத்தாள்களை பார்த்த எனக்கு அதிர்ச்சி . மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்தது தான் அதிர்ச்சி க்கு காரணம். நான் தேர்வு எப்படி எழுதினேன் என்பதை கொண்டு எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என்று ஒருவாறு யூகித்துருந்தாலும் , வந்த மதிப்பெண்கள் நான் எதிர்பார்த்ததை விட குறைவு. வீட்டுக்கு சென்றால் அம்மாவிடம் செம திட்டு வாங்க வேண்டுமே என்ற கவலை மேலோங்கி இருந்தது. என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டு இருந்தபொழுது அந்த 'வில்லங்கமான' யோசனை தோன்றியது. அது தான் ஒரே வழி என்று முடிவு செய்தேன். பள்ளி முடிந்தவுடன் அப்பா வருவதற்கு 10 -15 நிமடங்கள் ஆகும். அதற்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். பள்ளி முடிந்தது, நேரே விளையாட்டு திடலுக்கு சென்றேன். நாங்கள் விளையாட அங்கு கம்பிகளை கொண்டு செய்யப்பட்ட ஒரு கன சதுரம் (cube) அமைப்பு இருந்தது. ஏணிகளை வைத்து ஒரு 8 -9 அடி கன சதுரம் (cube ) செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு அமைப்பு அது. அந்த அமைப்பில் எனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தேன். அந்த அமைப்பின் உள்ளிருந்து படிகள் போல இருக்கும் கம்பி வழியாக ஏறி அந்த அமைப்பின் உச்சிக்கு சென்றேன், பின்பு தலைக்கு மேல் இருக்கும் கம்பிகளை ஒன்றன் பின் ஒன்றாக பிடித்து தொங்கி கொண்டே அந்த அமைப்பின் மத்திய பகுதியை அடைந்தேன். அடைந்தவுடன் கம்பி மீது இருந்த என் கைகளை விடுவித்தேன், 'தொப்' என்று என் முன்னம் கால் தரையில் படும் படி விழுந்தேன். தினந்தோறும் நான் அங்கு விளையாடுவதால் அங்கிருந்து விழுந்தால் பெரிதாக அடிபடாது என்று எனக்கு தெரியும். நான் நினைத்தது போலவே முன்னம் காலில் சிறு காயம். வழியும் ஒன்றும் பெருசாக இல்லை.
ஆம் !!. இது தான் அந்த 'வில்லங்கமான' யோசனை. எனக்கு அடிபட்டால், அம்மாவின் நினைப்பு எல்லாம் காயம் மேல தான் இருக்கும், நான் எடுத்த குறைந்த மதிப்பெண்கள் என் காயத்திற்கு முன்னால் அடிபட்டு போகுமல்லவா??. நான் நினைத்தது அப்படியே நடந்தது . நான் வீட்டுற்கு சென்றவுடன், என் அம்மா'வின் கவனம் எல்லாம் காயத்தின் மேல் தான். "அம்மா, midterm test ல மார்க் கம்மி'மா !!" என்று நானே சொன்ன பின்பும் அம்மா "அடுத்த வாட்டி பாத்துக்கலாம்" என்று சொன்னாங்க !!. ஒரு திட்டு கூட திட்டவில்லை. வெற்றி !! வெற்றி !! எனது திட்டம் வெற்றி !! என்று எனக்கு மிகுந்த சந்தோசம் :-).

இன்றளவும் என் அம்மாவிற்கு காயத்திற்கான உண்மை காரணம் தெரியாது என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வு கூட அம்மா ஞாபகத்தில் இருக்குமா என்பது சந்தேகமே :-). இது திருட்டுத்தனமா?? புத்திசாலித்தனமா??
அசட்டுதைரியமா ?? தெரியலை. ஆனால் நேற்று நடந்தது போல என் மனதில் எப்போதும் நிற்கும் நிகழ்வு :-). "எதையும் பிளான் பண்ணி பண்ணனும்கிறதுக்கு" ஒரு நல்ல எடுத்துக்காட்டு :-)

Friday, August 5, 2011

HINDI - National Language of India ??


Ok.. my first post in English. Letz see how it goes :). It is a topic that I have discussed in length and breath with most of my friends and always had fun discussing it :). Is HINDI a National Language of India or can it be called as a National Language of India or is there really something called National Language ?.

My answer was/is/will be always a BIG 'NO'.

Hindi is not a National Language of India and infact as per constitution there is nothing called as National Language.

Let me try to break myth surrounding this !!

Myth/Argument No #1: We have a National animal, National Game, National Flower, National Anthem why not National Language

Idea of giving "National" tag is to either bring awareness to people or create a sense of identity. For example, Lion was named the National Animal of India after independence. But due to dwindling population of Tigers. Tiger was made national animal of India to create awareness among the people about the Tigers and save it from extinction. National Anthem, Flower was to create a sense of identity. You can't categorize "Language" under both the categories. Hindi cannot be used as identity for Indians because it will look as if every Indian to be Indian will have to know Hindi and which is absurd. If a person who is living in remote India (say example in remote Karnataka, Tamil Nadu etc) has his own language to communicate with his/her society or people, why does he/she need Hindi??and if Hindi is made as National Language and he/she doesn't know Hindi, he/she will be labeled/harassed as non-Indian. Will it be fair on him/her and do we need that??.

Please see link below in India Government. There is no National Language :)
http://india.gov.in/knowindia/national_symbols.php

Also, quoting Tamil Nadu ex-CM Mr. C.N. Annadurai famous Parliamentary speech

"While countering the arguments that Hindi is spoken by most number of people, He replied if that is the case, Rat should be the national animal and crow should be national bird. He cleared his stand by saying. National symbols define the culture of the country. We are not objecting that hindi should not be made the national language of the country. We accept that it represents the culture of section of India, but not the whole. If Hindi is made as the national language, every other major language should be made the national language of India. ".

Myth/Argument No #2: Most People in India know Hindi, so it has to be National Language so that everybody can communicate easily and will help India growthIt is yet another dumb argument. Hindus are majority in India does that make Hindu to be National Religion of India??. Definitely No. This argument is similar to that. Also, out of the 28 states and 7 UTs, 10 States and 3 UTs use Hindi as one of the Official Languages. This still leaves the majority (18 states, 4 UTs) beyond their ambit. India is not a country of single culture/tradition/language. India is known for multi-cultural, multi-faceted people. Picking out a single language from among 22 official languages spoken in India and terming it as National language or wanting it to be termed as National Language is disgrace to other languages spoken and is against the 'UNITY in DIVERSITY' Concept of India. Countries like Singapore (Chinese, Malay and Tamil), Malaysia (Malay and Tamil), Switzerland (Romansh, Italian, French, and English) has more than one official languages and and doesn't have any problem and all are well developed countries. Also, one of the main reasons for the civil war in Sri Lanka is the Sinhala only act 1956 which gives importance to Sinhala at the expense of Tamil. Will that need to happen in India?? why some people are obsessed saying Hindi has to be National Language of India and all should know Hindi??
Myth/Argument No #3: Constitution Says Hindi is National Language

Constitution Says Hindi is official Language not National Language

DIFFERENCE between National and Official Language:
NATIONAL LANGUAGE: Defines the people of the nation, culture, history.
OFFICIAL LANGUAGE: A language that is used for official communication

Here is details on the constitution part of it
Article 343: This defines Hindi in devangari script and English to be the "OFFICIAL LANGUAGES" of union govt.
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17343.html

So English and Hindi can be used as communication language between governments and states. It was never mentioned that it will be a National Language.

Even in High Courts and Parliament, a person can speak in any official language it is not must for him to know Hindi. See below for language to be used in courts
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17348.html


Article 345: This gives the State govt., power to decide its own "OFFICIAL LANGUAGE"
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17345.html

While a National language by default can become the Official language, an Official language has to be APPROVED legally to become the National language. All languages spoken in India, starting from the most populous to the least are our national languages, because all of them define the people of this nation, culture and their history collectively.

Myth/Argument No #4: When English needs to be mandatory, Why not Hindi??My answer would be English will be gateway to world whereas Hindi might be helpful if I move of the state. But I intend to stay in my state there is no use of me learning Hindi. English has been medium of education for science related information or knowledge right from days of British's rule. So it makes sense for me to 'compulsorily' learn the English which will help understand the technology surrounding and will be useful in doing professional courses as English is only source of medium in India for professional courses. And as all of us know, backbone of India IT market is our English skills and we don't want to break that by demeaning English.
I hope I had broken all the myths surrounding HINDI being a National Language. When I argue like this, people think that am against Hindi, I hate Hindi, am not patriotic. The fact is am against 'mandatory' imposion of Hindi in a state which doesn't require Hindi. I don't mind people learning if needed. For example, if I had to settle in U.P or M.P which is Hindi-dominant area, I need to know Hindi and I will have to learn it to survive there. I will learn Hindi then. But not in T.N where Tamil is more than enough. Everybody needs to be given freedom to learn the language based on their needs.

Finally I will submit my case of how HINDI IS NOT THE NATIONAL LANGUAGE quoting Gujarat High Court order

"But the court asked whether there was any notification saying Hindi is India's national language, for it's an ``official language'' of this country. No notification ever issued by the government could be produced before the court in this regard. This is because the Constitution has given Hindi the status of the official language and not the national language.
The court concluded that the rules have specific provisions for manufacturers that particulars of declaration should be in Hindi in Devanagari script or in English, and it's their prerogative to use English. Therefore, no mandamus can be issued on manufacturers or governments for giving details or particulars of package in Hindi."
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi

Every Language/Religion/Community in India is equally important irrespective of the amount of people within the community. Everything has it is own uniqueness, beauty. Tagging any one of them as 'NATIONAL' is an insult/disgrace to the others. In my opinion, Imposing all to learn one language, imposing all to follow one religion, imposing all to follow one culture is same. Lets us not support people who are trying to do that. Lets respect India the way it has been always "DIVERSIFIED, YET UNIFIED" !!

Thursday, August 4, 2011

திருட்டுத்தனம்


ஆண்டு 1989, நான் SBOA வில் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த சமயம் அது... அப்போது நான் சுமாராக படிக்கும் மாணவன் தான். அதனால் நான் சரியாக படிக்காத சில பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து இருந்தார் எனது வகுப்பு ஆசிரியர். என்னுடன் வேறு சில மாணவர்களும் அவ்வகுப்பிற்கு வந்தனர். தினம்தோறும் பள்ளி முடிந்த உடன் இவ்வகுப்புகள் நடந்தன.

அன்று சிறப்பு வகுப்பில் பரிட்சை இருப்பதாக என் ஆசிரியர் முன்னமே கூறி இருந்தார். ஆனால் நானோ ஒன்றும் படிக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது என் மனதில் ஒரு "கருணாநிதி" முளைத்தான். உடனே நான் தேர்வு எழுத போகும் விடை புத்தகத்தை எடுத்தேன், அதன் கடைசி பக்கத்தில் எல்லா விடைகளையும் எழுதி தேர்வுக்கு தயார் ஆனேன் :-). பள்ளி முடிந்த உடன் சிறப்பு வகுப்புகள் தொடங்கின. நானும் எனது 'பிட்' உடன் தயாராக இருந்தேன். தேர்வு தொடங்கியது. எனது 'பிட்'னை ஆசிரியர் பார்க்கிறாரா என்று கவனத்துடன் "எழுதி" இல்லை இல்லை 'பிட்' அடித்து கொண்டு இருந்தேன். ஒரு 15 நிமிடங்கள் கடந்து இருக்கும். அப்போது திடிரென்று என் வலது பக்கத்தில் இருந்து ஒரு குரல், "மிஸ், சீனிவாஸ் புக் பார்த்து எழுதுறான் மிஸ்". திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன் ராஜேஸ்வரி என்று என்னுடன் படிக்கும் மாணவி, 'பாப் கட்டிங்' முடியுடன் சற்று உயரமாக இருப்பாள், என்னை மாட்டி கொடுத்துவிட்டாள் (இந்த பொண்ணுகளே இப்படி தான் பாஸ் :-)). அவளுக்கு என் மேல் என்ன கடுப்போ தெரியவில்லை. அவளுக்கு காட்டவில்லை என்ற கோபத்தில் போட்டு கொடுத்தாளோ?? தெரியவில்லை !!. என்ன கோபம் இருந்தாலும் "பேச்சு பேச்சாக" இல்லாமல் என்னை போட்டு கொடுத்துவிட்டாளே என்று அவள் மேல செம கடுப்பு. ஆனால் என்ன செய்ய கையும் களவுமாக மாட்டியாச்சு :-( . என்னோட விடை புத்தத்தை பிடுங்கி கொண்டு என்னை தனியே உட்கார வைத்தார் என் ஆசிரியர். பள்ளி முடிந்த உடன் என்னை அழைத்து செல்ல வரும் என் அப்பாவிடம் போட்டு கொடுக்க காத்து கொண்டு இருந்தார். என் அப்பாவும் வந்தார், அனைத்தும் அவரிடம் 'பற்ற' வைக்கப்பட்டது. அன்று வீடுக்கு சென்ற பின் அம்மா, அப்பா என்று இருவரிடமும் திட்டும், அறிவுரையும் மாறி மாறி வாங்கினேன். நான் செய்த முதல் திருட்டுத்தனம் "மெகா பிளாப்" ஆனது. அதன் பிறகு கல்லூரி முடிக்கும் வரை எனக்கு 'பிட்' அடிக்க தைரியம் வரவேயில்லை. இன்றளவும் என் அம்மா கேட்கும் கேள்வி "எப்படி டா உனக்கு அந்த வயசுல இந்த மாதிரி திருட்டு புத்தி வந்தது?" :-)

இப்போது திரும்பி பார்க்கும் போது இந்த தவறு அந்த வயதில் நடந்து அதற்கு
தண்டனையும் கிடைத்தது நல்லதே என்று தோன்றுகிறது. "தீயை தொட்டால் சுடும்" என்று எனக்கு புரிய வைத்த ராஜேஸ்வரி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு என் நன்றி :-)

Wednesday, August 3, 2011

ராஜ ராஜ சோழனை நாம் மறந்துவிட்டோமா ??


ராஜ ராஜ சோழன்.. உலகத்தின் தலை சிறந்த மன்னர்களில் ஒருவர். கி.மு 980 முதல் 1014 வரை ஆட்சி புரிந்தவர்.  தனது ஆட்சியின் கிழ் மிகப்  பெரிய சோழ சாம்ராஜ்ஜியம் உருவாக்கியவர்.  தான் போரிட்ட எந்த போரிலும் தோல்வி அடையாத மகத்தான வீரர். ஆனால் இவ்வளவு சிறப்பு மிகுந்த வீரருக்கு நாமும் , நம் மாநில அரசும் தகுந்த மரியாதை தருகிறோமா??  அவர் நினைவாக அவர் பேரில் ஒரு பல்கலைகழகம் உண்டா? அவர் பேரில் ஒரு விருது உண்டா?  பாடப்புத்தகத்தில் அவர் சிறப்பைச்  சொல்லும் தனிப்  பாடம் உண்டா??  99% மக்கள் அறிந்தது எல்லாம் அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டினார் என்பது மட்டுமே !!.  அவருடைய சாதனைகள் அது மட்டும் தானா??. இதோ எனக்குத்  தெரிந்த சில துணுக்குகள்


 - குடவோலை முறை முலம் மக்களே தங்கள் தலைவர்களைத்  தேர்ந்தெடுக்கும் முறையை உருவாக்கி, ஜனநாயகத்திருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிள்ளையார் சுழி போட்டவர்.- நிலப்பகுதிகளை முறைப்படி ஆவணம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்.
- உலகத்திலேயே முதல் முறையாக கடற்படை அமைத்தவர்.
- தான் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில், கோவில் பணி புரிந்தவர்கள் பற்றியும் கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர்கள் பற்றியும் கூறி அனைவரையும் சிறப்பித்தவர்.
- கடல் கடந்த நாடுகளாகிய கம்போடியா, ஜகார்ட தீவுகள், தற்போதிய இந்தோனேசியாவின் சிலப்  பகுதிகள் ஆகியவற்றை தன் மகன் ராஜேந்திர சோழன் முலம் வென்று தமிழ் கொடியை உலகம் எங்கும் பறக்கும்படி செய்தவர்.

இன்னும் எனக்குத் தெரியாத சாதனைகள் பல உள்ளது. இது எல்லாம் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாமா??. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தில் பெரிய சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி தமிழின் பெருமையை உலகுகெங்கும் பரப்பிய மன்னற்கு நாம் தகுந்த மரியாதை செலுத்த வேண்டாமா ??.

கிருஷ்ணதேவராயர்க்கும், சத்ரபதி சிவாஜிக்கும் நம் அண்டை மாநிலமான மகாராஷ்டிரா, ஆந்திரா கொடுக்கும் மரியாதையை கூட நாம் ராஜ ராஜ சோழனுக்கு வழங்கவில்லையே ஏன்?. வேலை நிமித்தமாக நான் மும்பையில் 1.5 ஆண்டு இருந்த போது அங்கே மராத்தியர்கள் சிவாஜிக்கு கொடுக்கும் மரியாதை பார்த்து வியந்து போனேன். விமான நிலையம், புகைவண்டி நிலையம், பல்கலை கழகம், பேருந்து நிலையம் , பூங்கா, சாலை என அனைத்துக்கும் சிவாஜி பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். சிவாஜி பற்றியும் அவரது வீரம் பற்றியும் குழந்தை முதல் பெரியவர் அனைவருக்கும் தெரிந்து இருந்தது. சிவாஜி என்றால் மாபெரும் மராத்திய வீரன் என்று நமக்கும் தெரிந்து இருகிறது. ஆனால் அவர்களுக்கு ராஜ ராஜ சோழன் யார் என்று கூட தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் சிவாஜியை மராத்திய மக்களும், மாநில அரசும் இன்னும் மறக்கவில்லை. சிவாஜி இன்னும் மராத்திய மக்கள் மனதில் இருகிறார். அதே போல தான் கிருஷ்ணதேவரயரும் ஆந்திரா மக்களால் கொண்டாடப்படுகிறார். சிவாஜி, கிருஷ்ணதேவராயர் சிறந்த மன்னர்கள் என்றாலும் அவர்களது ராஜ்ஜியம் ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கிழ் இருந்த சோழ சாம்ராஜ்யதை விட மிக சிறியதே (பார்க்க படங்கள்)

மராத்திய சாம்ராஜ்ஜியம்


கிருஷ்ணதேவராயர் சாம்ராஜ்ஜியம்


ராஜ ராஜ சோழன்/ராஜேந்திர சோழன் சாம்ராஜ்ஜியம்



ராஜ ராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் தங்கள் வாழ்நாளில் ஒரு போரில் கூட தோல்வியே தழுவாத மகத்தான வீரர்கள். ஏனைய நாடுகள் உலோகம் பற்றி அறியாத காலகட்டத்தில் உலோகம் வைத்து சிற்பங்களை வடிவமைக்க வைத்தனர். மேலும் அவர்கள் ஆட்சிக்காலத்தில் உலகத்தின் மிக பெரிய சாம்ராஜ்ஜியமாக விழங்கியது தமிழகம். ஆனால் இவர்களுக்கு தமிழகத்தில் என்ன மரியாதை செய்து இருகிறோம். எனக்குத் தெரிந்து ராஜ ராஜன் அவர்களுக்கு தஞ்சையில் சில சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதைய நட்சத்திரத்தில் பிறந்தார் (ராஜ ராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாதத்தில் நானும் பிறந்தேன் என்பதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை :-) ) . ஐப்பசி மாதத்தில் சதைய நட்சத்திரம் தோன்றும் தினத்தை சதைய விழாவாக தஞ்சையில் கொண்டாடுவர். அவரது சிலையை கொண்டு பெரிய கோவில் சுற்றி ஒரு வலம் வருவர். அவ்வளவே முடிந்தது சதைய விழா. அவர் பிறந்த தினத்தை தமிழகமே கொண்டாட வேண்டாமா?? அரசு அதற்கு வழி வகை செய்ய வேண்டாமா??. ராஜேந்திர சோழனின் நிலைமை இன்னும் மோசம் அவருக்கு தமிழகத்தின் எந்த மூலையிலும் சிலை கிடையாது. எந்த கோவிலிலும் விழா எடுப்பதும் கிடையாது . இது எல்லாம் போதாது என்று தஞ்சை கோவில் முன் வாசல் வழியாக வந்தால் நல்லது இல்லை என்று அவதுறு பரப்பும் வேலைகளையும் செய்கிறோம்.

இன்னொரு ஆச்சரியமான செய்தி என்வென்றால், 18ஆம் நூற்றாண்டு வரை தஞ்சை கோவிலை கட்டியது யார் என்று நமக்குத் தெரியாது. ராஜ ராஜ சோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்பதை கண்டறிந்து சொன்னது ஒரு ஜெர்மன் ஆய்வாளர். அதாவது 400 ஆண்டுகளில் (1400 - 1800) நம் வரலாற்றை முற்றிலுமாக மறந்துவிட்டோம். அந்தக் காலகட்டத்தில், நம் மீது தொடர்ந்து வந்த பல ஆக்கிரமிப்பு காரணமாக நமது முன்னோர்கள் மறந்து இருக்கலாம். நாமும் வளர்ந்து வரும் மேற்கத்திய மோகத்தில் அந்த தவறை மீண்டும் செய்து விடகூடாது. அப்படிச் செய்தால் காலம் நம்மை மன்னிக்காது.

நமது வரலாற்றைப் பற்றி நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவதும், ராஜா ராஜ சோழன் போன்ற அரசர்களின் வீரத்தைப் பற்றியும் அவர்கள் புரிந்த அளவிலா சாதனை பற்றி கூறுவதும் நம் அனைவரின் கடமையாகும்

ராஜ ராஜ சோழன் புகழ் என்றும் வாழ்க !!
Related Posts Plugin for WordPress, Blogger...