Thursday, March 1, 2012

எனக்கு பிடித்த பாடல் வரிகள்

எனக்கு பிடித்த பாடல் வரிகளின் தொகுப்பு... இந்த வரிகள் இப்போதைக்கு என் நினைவில் வந்த வரிகள் .. இது தொடர்ந்து புதுப்பிக்கப்படும் :-)

1. ராஜா ராஜ சோழன் படத்தில் - "தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே" பாடலில் வரும்

"நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க!
நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க!
தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க!
வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர்
விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க!"

2. தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே!

3. நான் கடவுள் - "பிச்சை பாத்திரம்" பாடலில் வரும்
"பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே !!"

4. ஆண்டவன் கட்டளை - "ஆறு மனமே ஆறு" பாடலில் வரும்
"நிலை உயரும் பொழுது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும் !!"

5. நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும்
"நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை !!
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றுமில்லை !!"

6. பாசம் படத்தில் வரும் M.G.R பாடல்
"உலகம் பிறந்தது எனக்காக !!
ஓடும் நதிகளும் எனக்காக !!
மலர்கள் மலர்வது எனக்காக!!"

7. அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாடல்
"புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை !!
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை !!"

8. புதிய பூமி - "நான் உங்கள் வீடு பிள்ளை" பாடலில் வரும்
"ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு!!"

9. சுமை தாங்கி - "மயக்கமா கலக்கமா" பாடலில் வரும்
"வந்த துன்பம் எதுவென்றாலும், வாடி நின்றால் ஓடுவதில்லை "
"நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு"
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு"

10. பணக்காரன் - "மரத்த வச்சவன் " பாடலில் வரும்
"காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு !!"

11. பாட்ஷா - "பாட்ஷா பாரு " பாடலில் வரும் (ரஜினிகாந்த் பற்றி)
"நூறு முகங்கள் மாறி வந்தும் ஏறு முகத்தில் இருக்கும் வீரன் தான்னடா !!"

12. பணம் படைத்தவன் - கண் போன போக்கிலே பாடலில் வரும்
"திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்து என்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

13. திருடாதே - 'திருடாதே பாப்பா திருடாதே" பாடலில் வரும்
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

14. ராமன் தேடிய சீதை - "மழை நின்ற பின்பும் தூறல் போல " பாடலில் வரும்
"கண் இமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே !!
உன் செவியில் விழவில்லையா?? உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே !!"

15. "பாவ மன்னிப்பு" படத்தில் வரும் ஜெமினி பாடல்
"காலங்களில் அவள் வசந்தம்....
கலைகளிலே அவள் ஓவியம்....
மாதங்களில் அவள் மார்கழி....
மலர்களிலே அவள் மல்லிகை...."

16. "பஞ்சவர்ணக்கிளி" படத்தில் பாரதிதாசன் எழுதிய அற்புதமான வரிகள் பாடல் வடிவில்
"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"

17. முத்து - "விடுகதையா இந்த வாழ்க்கை" பாடலில் வரும்
"பசுவினை பாம்பு என்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்"

18. தளபதி - "சின்ன தாய் அவள்" பாடலில் வரும் கதையே இரண்டு வரியில் கூறும் அற்புதமான வரிகள்
"தாய் அழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர"

19. சந்திரோதையம் - "புத்தன் இயேசு காந்தி பிறந்தது எதுக்காக" பாடலில் வரும்

"நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு,
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு,
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு!!"

2o அண்ணாமலை - "வெற்றி நிச்சியம்" பாடலில் வரும்
"மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோசம்,
பாறைகள் நீங்கினால் ஓடைகில்லை சங்கிதம் !!"

21. காசேதான் கடவுளடா பாடலில் வரும்
"கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா !!"
"அளவுக்கு மேல பணம் வைத்து இருந்தால் அவனும் திருடனும் ஒன்றாவான்
!! "

22. "இரவும் பகலும் வரும்" பாடலில் வரும்

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் !!
பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான் !!
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்று தான் !!
Related Posts Plugin for WordPress, Blogger...