Friday, March 22, 2013

இதுவும் நடக்கும்....

இலங்கை தமிழர் நலனுக்காக உலக நாடுகள் பாடுபடும்,
இந்தியாவில் பெருகி கிடக்கும் ஊழல் ஒழியும்,
இந்திய அரசு தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும்,
அரசு அலுவலங்களில் லஞ்சமின்றி வேலை நடக்கும்,
வரி ஏயப்பு என்பது இல்லாமல் போகும்,
தமிழகத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும்,
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும்,
கர்நாடகம் உரிய காவேரி நீரைத் தமிழகத்திற்கு திறக்கும்,
பள்ளிகள் முறையான கட்டணம் வசூலிக்கும்,
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்கும்,
எளியோருக்கும் கருத்துரிமை கிடைக்கும்,
இவை எல்லாம் நடக்கும்,
இதற்கு மேலும் கூட நடக்கும்.
உலகம் மறுபடியும் பிறந்து வந்தால் !!

Thursday, March 21, 2013

உயிர் மொழி

ன்பு நிறைந்த மொழி,
ண்டவன் அருளிய மொழி,
லக்கணமில்லா மொழி,
டு இணை இல்லா மொழி, 
வகை தரும் மொழி,
ரார் அனைவரையும் மயக்கும் மொழி,
ளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி,
க்கம் தீர்க்கும் மொழி,
யமேதும் எழா மொழி,
ளிவு மறைவற்ற மொழி,
ங்கார இசையினும் இனிய மொழி,
வை ரசித்த மொழி,
தே.. மழலை மொழி !!..

Saturday, March 16, 2013

குழந்தை தொழிலாளி



கல் நெஞ்சம் கொண்டவர்களிடம்
கல் உடைக்கிறேன்,

கடனாளி பெற்றோரிகளின்
கடன் தீர்க்கும் பொருளாகிறேன்,

படிப்பின் மூலம் ஒளி தருவதை விடுத்து
பட்டாசின் மூலம் ஒளி தருகிறேன்,

ஓடியாடி விளையாடாமல்  பணத்தாசை ம(மா)க்களுக்காக
ஓடியாடி உழைக்கிறேன்,

சிறப்பான கல்வியினை நோக்கி  ஓட ஆசை கொண்டும்
சில்லறை தேடி ஓட வற்புறுத்தப்படுகிறேன்,

ஈரமற்ற முதலாளியின் பாத்திரங்களை   கண்களின்
ஈரம் கொண்டு கழுவுகிறேன்,

ஆயிரமாயிரம் கண்கள் என்னை கடந்த   போதும்
ஆண்டவன் மட்டுமே துணையாக வருகிறான்,

பரிதவிக்கும் கண்கள் கூட இரக்கப் பார்வை  மட்டுமே
பரிசாகத்  தருகின்றன,

இரக்கமற்ற சமுதாயமே.. மனம் இறங்கி கேட்கிறேன்
இறுக்கம் தளர்த்தி உதவ மாட்டாயா?

கருவறையிலிருந்து   வெளிப்பட்ட முதல் உழைக்கிறேன்
கண் கொண்டு பார்க்க மாட்டாயா?

என் கதறலை  உன் செவி கேட்க மறுக்கிறதா ?
என் நிலை மேன்பட ஏதேனும் செய்ய மாட்டாயா?

இந்த கவிதைக்கு அட்லாண்டா மாநகர தமிழ் சங்கத்தின் கவிதை போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்தது 



Related Posts Plugin for WordPress, Blogger...