Thursday, August 1, 2013

இதயம் வரையும் மடல்

என்னவளுக்கு என் இதயம் வரையும் மடல் --

நிழலென என்னுடன் வரவிருக்கும் என்னவளே,
இன்னுயிருடன் இணையவிருக்கும் இனியவளே,
காலங்கள்  அனைத்தையும் வசந்த காலமாக மாற்றவிருப்பவளே,
சூறாவளியையும் தென்றலாக வீச வைப்பவளே,
இருளை அகற்ற வந்த வெண்ணிலாவே,
வாழ்க்கையை மணக்கச் செய்ய வந்த மல்லிகையே,
தனிமை சிறையிலிருக்கும் எனை விடுவிக்க வந்த தாரகையே,
நெடும் பயணத்திற்கு துணையாய் வரவிருக்கும் என் பாதியே,
என்னை என்னிடமிருந்து திருடியதற்கு தண்டனையாக,
உனை எனில் சிறை வைக்கப் போகிறேன் 
நம் திருமணத்தின் மூலம்...

10 comments:

  1. உனை எனில் சிறை வைக்கப் போகிறேன்
    நம் திருமணத்தின் மூலம்...
    >>
    பாவம் அந்த புள்ளை!!

    ReplyDelete
    Replies
    1. மனச்சிறையை சொன்னேனுங்க :)
      அப்பவும் பாவமா? :). தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி

      Delete
  2. இரா.லோகநாதன்August 2, 2013 at 3:52 AM

    நன்று.

    பாரேன் உனக்குள்ள இவ்வளவு நாளா என்னவோ இருந்திருக்கு மச்சி, இப்ப தான் வெளியவந்திருக்கு.

    வாழ்த்துகள் :o)

    ReplyDelete
  3. சிறை வைக்க ஏன் தாமதம்...?

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கலக்கிட்டீங்க ஸ்ரீனி..கவிதை எல்லாம் பலமா வருதே :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .. ஆமாம்.. என்ன பண்ண.. மாறி தானே ஆகணும் :).. மிக்க நன்றி கிரேஸ் :)

      Delete
  5. ரா.லோகநாதன்September 10, 2013 at 4:32 AM

    அன்பும் அறனும் உடைத்தாயின் - இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.

    வாழ்க! வளர்க!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...