Thursday, April 4, 2013

நீயின்றி அணுவும் அசைவதில்லை

என் வாழ்வூதியம்  தரும் முதலாளியானாய்,
என் தனிமைக்குத் துணையானாய்,
என் பயணம் எங்காயினும் வரும் பயணியானாய்,
என் தமிழ் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகமானாய்,
விடியல் தொடங்கி இரவு வரை என்னுடனே இருக்கும் நிழலானாய்,
கையிலிருந்தபடி அறிவினைத் தரும் ஆசானானாய்.

இவை அனைத்துமாகி எனை உன்னிடத்தில் சிறை வைத்தாய்,
சக மனிதர்களிடம் பழகுவதை குறைக்க வைத்தாய்.
உன்னை விட்டு போய்விடுவேன் என்ற பொறாமையா?
என்னையும் உன்னைப் போல எந்திரமாக்கிவிட்டாய்.

நீ நல்லவனா?  வல்லவனா?  கொடியவனா?
தெரியவில்லை..  ஆயினும்
நீயின்றி அணுவும் அசைவதில்லை எனக்கு,
என் கணினியே!! நீயின்றி உலகில்லை எனக்கு !!

  

9 comments:

  1. அருமை ஸ்ரீனி! கணினி உடனான உறவை அழகாச் சொல்லியிருக்கீங்க!

    //நீயின்றி அணுவும் அசைவதில்லை எனக்கு,// உண்மை! உண்மை!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கிரேஸ் :)

      Delete
  2. Replies
    1. இணைத்து விட்டேன் நண்பரே. நன்றி :)

      Delete
  3. அப்படித்தான் ஆகிப் போச்சி...!

    தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. :). தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...