Friday, March 22, 2013

இதுவும் நடக்கும்....

இலங்கை தமிழர் நலனுக்காக உலக நாடுகள் பாடுபடும்,
இந்தியாவில் பெருகி கிடக்கும் ஊழல் ஒழியும்,
இந்திய அரசு தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும்,
அரசு அலுவலங்களில் லஞ்சமின்றி வேலை நடக்கும்,
வரி ஏயப்பு என்பது இல்லாமல் போகும்,
தமிழகத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும்,
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும்,
கர்நாடகம் உரிய காவேரி நீரைத் தமிழகத்திற்கு திறக்கும்,
பள்ளிகள் முறையான கட்டணம் வசூலிக்கும்,
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்கும்,
எளியோருக்கும் கருத்துரிமை கிடைக்கும்,
இவை எல்லாம் நடக்கும்,
இதற்கு மேலும் கூட நடக்கும்.
உலகம் மறுபடியும் பிறந்து வந்தால் !!

10 comments:

  1. I don't think we need rebirth of planet to change all these thing happen..

    I believe we need change of attitude to make these things happen...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி. மாறினால் நல்லது :)

      Delete
  2. எல்லோருக்கும் புரிய வேண்டுமே?

    ReplyDelete
    Replies
    1. ஆம். நிலைமை மாறும் என்று நம்புவோமாக. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவியாழி அவர்களே :)


      Delete
  3. ஆம் அதை காண நாம் இல்லாவிட்டலும் புதிய உலகம் தோன்றட்டும் இறைவனிடம் என்பவன் இந்த உலகதின் முதலாளியாக இருந்தால் வேண்டி கொள்கிறேன் ஒரு நொடி கொடுக்க மாறிய உலகத்தை காண

    ReplyDelete
    Replies
    1. என் வேண்டுதலும் அதுவே.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பூவிழி அவர்களே

      Delete
  4. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும்?

    தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு ?

    தொடர்ந்து மின்வாரியத்தில் ஏற்ப்படும் இழப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்!

    26.2.2013 அன்று தமிழ் நாடு மிசரவாரியம் தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்தி கேட்டு மனு செய்துள்ளது.

    http://vitrustu.blogspot.in/2013/04/172013.html?showComment=1364883704909#c6463710653221408261

    ReplyDelete
    Replies
    1. கனவு தானே :). இல்லாத மின்சாரத்திற்கு கட்டண உயர்வு வேற. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

      Delete
  5. என்ன ஒரு தன்னம்பிக்கை என்று வியந்தேன்
    தொடரை வாசிக்கும் போது முடிவில் நல்ல
    பெரிய பல்பு கிடைத்து விட்டதே எனக்கு இன்று
    உங்களால் :) வாழ்த்துக்கள் வித்தியாசமான
    சிந்தனைத் திறன் பாராட்டுகின்றேன் (பல்பு
    வாங்கினதைக் கூட மறந்துமா :) )

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. நன்றி சகோதரி :). தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...