tag:blogger.com,1999:blog-20250761874568409282024-03-13T13:58:21.496-04:00எனது மனவெளியில்Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-42643576780351519212017-11-06T00:30:00.000-05:002017-11-06T00:30:04.686-05:00எங்கள் நந்தனே !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உலகாண்ட ராஜ ராஜன்<br />
உதித்த ஐப்பசியில்<br />
எங்களை ஆள உதித்த<br />
எங்கள் கோவே !!<br />
<br />
மழலையின் கொஞ்சலோடும்<br />
மதுரத் தமிழின் இனிமையோடும்<br />
எங்களை வசீகரிக்கும்<br />
எங்கள் அமுதே !!<br />
<br />
முருகனின் அழகோடும்<br />
முகுந்தனின் குறும்போடும்<br />
எங்களை ஆட்கொண்ட<br />
எங்கள் நந்தனே !!<br />
<br />
கீதை துணைக் கொண்டு<br />
காமராஜர் வழிச் சென்று<br />
உலகை செழிக்க வைக்க<br />
உளமார வாழ்த்துகிறோம் !!<br />
<br />
<br />
<br />
<br /></div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-4333483561986464252017-01-07T00:38:00.001-05:002017-01-07T00:38:02.947-05:00நந்தனின் முதல் பிறந்தநாள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />என் அன்பு மகன் நந்தனின் முதல் பிறந்தநாள் <div>
அழைப்பிதழுக்காக எழுதிய சிறு கவிதை <br /><br /><div>
<span style="color: red;">குறும்பு கண்டு குதூகலித்த வருடம் </span></div>
<div>
<span style="color: red;">புன்சிரிப்பு கண்டு பூரித்த வருடம்</span></div>
<div>
<span style="color: red;">மழலை கேட்டு மகிழ்ந்த வருடம்<br />பட்டுக்கன்னம் தொட்டு பரவசித்த வருடம்<br />கண்ணனும் கந்தனும் அருளிய <br />எங்கள் குட்டி நந்தனின் முதல் வருடம்<br />உங்கள் ஆசீர்வாதம் பெற்று<br />முழுமை பெற அன்புடன் அழைக்கிறோம்</span></div>
<div>
<span style="color: red;"><br /></span><br /><a href="https://4.bp.blogspot.com/-afsZLpOaXPE/WHB9otAvEoI/AAAAAAAAGcI/6OYOic0rLnwO7ot-VTBsLkXNe7qVm2_oQCLcB/s1600/BirthdayInvite03.JPG"><img border="0" src="https://4.bp.blogspot.com/-afsZLpOaXPE/WHB9otAvEoI/AAAAAAAAGcI/6OYOic0rLnwO7ot-VTBsLkXNe7qVm2_oQCLcB/s320/BirthdayInvite03.JPG" /></a><br /></div>
</div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-34319005795362129252014-12-23T00:56:00.002-05:002014-12-23T00:56:22.859-05:00குளிரும் காலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
உதித்த ஆதவனும் குளிர் கண்டு, </div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
மேக போர்வைக்குள் உறங்க செல்ல, </div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
நான் மட்டும் எழுந்து </div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small;">
அலுவலக்ம் செல்ல வேண்டுமா ??</div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-19433966305810777032014-12-23T00:54:00.000-05:002014-12-23T22:20:26.853-05:00கனவில் வந்த காந்தி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<span style="color: red;"><b><br /></b></span></div>
<div>
<b style="font-weight: bold;"><a href="http://thaenmaduratamil.blogspot.com/2014/12/gandhi-in-my-dream.html#more">கிரேஸ்</a> </b>அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என் கனவிலும் வந்தார் காந்தி. அவரும் நானும் பேசிய உரையாடல் கீழே..</div>
<div style="color: red; font-weight: bold;">
<span style="color: red;"><b><br /></b></span></div>
<div style="color: red; font-weight: bold;">
1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?</div>
<div>
மறுபிறவியா?.. இதுவே எப்ப மூட்டைய கட்டுவோம்னு இருக்கு.. மறுபிறவி வேண்டாம் ஐயா !!... தப்பித் தவறி பிறந்தாத் தமிழனாகவே பிறக்க வேண்டும். </div>
<br />
<span style="color: red; font-weight: bold;">2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?</span><br />
ஹம்ம்.. அப்படியும் நடக்குமோ??.. தவறி நடந்தால்..<br />
என் முதல் வேலை அரசு பள்ளிகளின் கல்வி தரத்தையும், ஆரம்பச் சுகாதார மையங்களின் தரத்தையும் உயர்த்துவதுமாக இருக்கும்.<br />
அடுத்து, அமெரிக்காவில் இருப்பது போல, அனைத்து பள்ளிகளிலும் (தனியார் பள்ளி உள்பட) தொடக்க பள்ளிக் கல்வி இலவசமாகத் தர முயற்சி செய்வேன். பின்பு, அனைத்து நதிகளையும் இணைக்கச் முயற்சி மேற்கொள்வேன்.<br />
<div>
<br />
<span style="color: red; font-weight: bold;">3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?</span><br />
மக்களுக்கு பயன்படும் திட்டம் எதுவாயினும் இந்தியர்கள் அனைவரும் வரவேற்பர். இதில் வெளிநாட்டு இந்தியர் விதிவிலக்கு இல்லை என்று உறுதியுடன் நம்புகிறேன். ஒருவேலை அவர்கள் எதிர்த்தால், அதற்கான காரணத்தை கேட்டு அறிந்து, அது சரியான காரணமாக இருக்கும் பட்சத்தில் அதை கருத்தில் கொண்டு அவர்களது பயத்தினை நீக்க முயற்சி செய்வேன்.<br />
<span style="color: red; font-weight: bold;"><br /></span>
<span style="color: red; font-weight: bold;">4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?</span><br />
முதியோருக்கான சலுகைகள் அனைத்தும் அலைச்சல் இன்றி, முடிந்தவரை, அவர்கள் வீடு சென்று சேரும் வகைளில் பார்த்துக் கொள்வேன்.<br />
வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதி, போக்குவரத்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களும் முதியோர்களின் வசதியை மனதில் கொண்டு இயங்கும் படிச் செய்வேன்.<br />
<span style="color: red; font-weight: bold;"><br /></span>
<span style="color: red; font-weight: bold;">5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?</span><br />
மக்கள் தேவையே தங்களின் முதல் தேவை என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் உணர வேண்டும். அதற்கு, முதற்படியாக அனைவரும் அவர்களது தொகுதியில் தங்கும் படிச் செய்வேன். பின்பு, அத்தொகுதி பொது மக்களின் மனுவை கணினியில் ஏற்றி, அவற்றை கண்காணித்து, அதன் மூலம் அரசியல்வாதியின் செயல் திறனை முறையாக அறிந்து, அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுபரிசீலனை செய்ய வழி வகைச் செய்வேன்.<br />
<br />
<span style="color: red; font-weight: bold;">6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?</span><br />
உண்மையில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைக்கும் பட்சத்தில் நீதி மன்றம் செல்வதில் தவறு இல்லை. ஆனால் நம் நீதி மன்றங்களை நம்பி போனால், நாம் பேரன், பேத்தி பெற்ற பின் தான் தீர்ப்பு வரும். எனவே நீதி மன்றத்தை மட்டும் நம்பி இருக்காமல், மதிப்பெண்ணை விட நம் மதியை பெரிதென மதிக்கும் இடம் நோக்கி செல்ல அறிவுறுத்துவேன்.<br />
<br />
<span style="color: red; font-weight: bold;">7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?</span><br />
நம் சங்க இலக்கியத்திலும், பண்டைய சமஸ்கிருத வேத நூல்களிலும் புதைந்து உள்ள அறிவியலை, மொழி வல்லுனர்கள் துணை கொண்டு படித்து அறிந்து, நம் இந்தியா ஒளிர, நம் மக்கள் சிறக்க, படைப்புகள் படைக்க நம் விஞ்ஞானிகளுக்கு வழி வகை செய்வேன்<br />
<br />
<span style="color: red; font-weight: bold;">8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?</span><br />
மக்களுக்கு பயன்படும் திட்டத்தை யாரும் நிறுத்த துணிய மாட்டார்கள். மக்களும் விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.<br />
<span style="color: red; font-weight: bold;"><br /></span>
<span style="color: red; font-weight: bold;">9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?</span><br />
<a href="http://covaiveeran.blogspot.com/2012/11/idaothikeetu.html">இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும்</a> என்ற பதிவில் நான் கூறி உள்ளது போல சமூகத்தின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு (5 ஆண்டோ, 10 ஆண்டோ)ஒரு முறை அறிந்து, அதற்கேற்ப அச்சமூகத்திற்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் திட்டத்தை செயல் படுத்துவேன்.<br />
<br />
<span style="color: red; font-weight: bold;">10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?</span><br />
மானிட பிறவி அல்லாத பிறவியா?...அப்படினா ஏதோ ஒரு வகை பறவையாக பிறக்க ஆசை. பறவைகளைக் மீது எப்பொழுதும் ஈர்ப்பு உண்டு. பறவையாகப் பிறந்து, இயற்கையோடு வாழ்ந்து, வான் உயரப் பறந்து, உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை </div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-26299381668983867942014-06-24T23:09:00.000-04:002014-06-24T23:26:18.561-04:00இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? - தொடர் பதிவு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தொடர் பதிவின் தொடர்ச்சியாக நண்பர் கிரேஸ் அவர்கள் கேட்ட 10 கேள்விக்கான பதில் இதோ :)<br />
<br />
1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?<br />
<div>
<span style="color: red;">100 வது பிறந்த நாளா?? வைரமுத்து கூறியது போல 'எட்டாம்' எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்லை என்பதே என் கூற்றும்... அப்படியே நான் தவறி போய் இருந்தா, என்னோட பிறந்த நாளை எல்லாரும் கொண்டாடும் படி இருக்கணும் (பேராசை தான்.. but, பரவாலை :-))</span><br />
<div>
<br />
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?<br />
<span style="color: red;">'அலுவலக வேலையை' போல மற்ற வேலையிலும் ஒழுங்காக கவனம் செலுத்த.</span></div>
<div>
<br />
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?<br />
<span style="color: red;">முதல் கேள்விக்கான பதில் எழுதும் பொழுது :)</span><br />
<br />
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?</div>
<div>
<span style="color: red;">கார்/பைக் எடுத்து ஒரு பயணம் போவேன். மனைவியுடன் எங்கையாச்சும் 'outing' போவேன். </span><br />
<br />
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?</div>
<div>
<span style="color: red;">கண்ணா, இதை படினு சொல்வேன் <a href="http://covaiveeran.blogspot.com/2012/02/marriage.html">http://covaiveeran.blogspot.com/2012/02/marriage.html </a> :)</span><br />
<span style="color: red;"><br /></span>
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?</div>
<div>
<span style="color: red;">உலக மக்களை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை </span><br />
<br />
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?<br />
<span style="color: red;">என் மீது அக்கறை காட்டும் யாரிடமும் </span><br />
<br />
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?<br />
<span style="color: red;">என்ன தகவல் என்பதை பொறுத்து தடுக்க முயற்சி செய்வேன். </span><br />
<br />
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?<br />
<span style="color: red;">"இதுவும் கடந்து போகும்னு" சொல்வேன். </span><br />
<br />
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?<br />
<span style="color: red;">பாதி நேரம் அலுவலக வேலை பார்ப்பேன். கொஞ்சம் 'xbox' விளையாடுவேன். மூடு இருந்தா புத்தகம் படிப்பேன். </span></div>
</div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-87566603167322559132014-03-16T23:13:00.000-04:002014-03-17T17:13:16.070-04:00புலியின் சீற்றம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-21qFrdXA-RI/UyZk9EE3k9I/AAAAAAAADrM/tqjQ8YyDKfQ/s1600/Tiger-Wallpaper-tigers-16120028-1024-768.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-21qFrdXA-RI/UyZk9EE3k9I/AAAAAAAADrM/tqjQ8YyDKfQ/s1600/Tiger-Wallpaper-tigers-16120028-1024-768.jpg" height="300" width="400" /></a></div>
<br />
மருந்துக்காக அழித்தாய், </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
மாந்திரிகத்துக்காக அழித்தாய், </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
எனை அழிப்பதனால் காட்டினையும் </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
அழிக்கிறாய் என உணர்ந்தாயா? </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
வயிற்றுப் பசிக்கு வேட்டையாடும் </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
எனை கொடிய மிருகம் என்கிறாய், </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
பணப் பசிக்கு இனத்தையே வேட்டையாடும் </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
உனை என்ன சொல்லி அழைக்க?</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<br />
பல லட்சமாக காடுகளை ஆண்ட </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
எனை சில நூறாக குறைத்தாய்,</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
நான் சுவடின்றி அழியும் வரை </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
உன் கொலை வெறி அடங்காதா?</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
தேசிய விலங்கென, வீரத்தின்<br />
சின்னமென அடையாளம் தந்தாய்,</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
இன்றோ எனை அழியும் இனங்களின்<br />
அடையாளமாக மாற்றியது ஏனோ?</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
<br />
நானும் உனை போல இப்புவியில் </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
வாழ உரிமை பெற்ற இனமன்றோ !!</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
ஆறறிவு பெற்றதனால் மட்டுமே, நீ<br />
தனியே வாழ முடிவெடுத்தாயோ?<br />
<br />
பரிணாம வளர்ச்சியில் நீ பெற்ற<br />
அறிவு எனை அழிக்கத் தானா? </div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
இப்பொழுதேனும் விழிப்பாய் மனிதா !!</div>
<div style="color: #222222; font-family: arial; font-size: small;">
நீயும் வாழ் .. என்னையும் வாழ விடு !!<br />
<br /></div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-15420816185835773662014-02-04T23:47:00.001-05:002014-02-05T09:29:07.441-05:00மகிழ்ச்சி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடலுக்கு நதியின் வருகை மகிழ்ச்சி<br />
கமலிக்கு ஆதவனின் உதயம் மகிழ்ச்சி<br />
<div>
<br /></div>
மழையோடு வெயில் வானவில்லிற்கு மகிழ்ச்சி<br />
மானிற்கு பசுமையான புல்வெளி மகிழ்ச்சி<br />
<br />
நெற்கதிர்க்கு நீரின் வரவு மகிழ்ச்சி<br />
நெசவாளிக்கு பட்டு உற்பத்தி மகிழ்ச்சி<br />
<br />
வேழத்திற்கு இன்சுவை கரும்பு மகிழ்ச்சி<br />
வேதனையுறும் குழந்தைக்கு தாலாட்டு மகிழ்ச்சி<br />
<br />
தேனீக்கு மலரின் மலர்ச்சி மகிழ்ச்சி<br />
தேனே, எனக்கோ உன் புன்னகையே மகிழ்ச்சி<br />
<br /></div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-11378429594212034282013-10-21T05:51:00.001-04:002013-10-25T17:49:13.995-04:00ஒளி காட்டும் வழி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாசலை அலங்கரிக்கும் கோலங்களில்லை<br />
தெருக்களில் ததும்பும் உற்சாகமில்லை<br />
குதுகலித்து ஓடியாடும் சிறுவர் கூட்டமில்லை<br />
அன்பை இனிப்புடன் பரிமார சொந்தங்களில்லை<br />
வான் ஒளிரும் வான வேடிக்கைகளில்லை<br />
செவி அதிரும் பட்டாசு சத்தமில்லை<br />
திருநாளுக்கான எந்த அறிகுறியுமில்லா<br />
அமைதியான தீபாவளி இன்று<br />
கடல் கடந்து அமெரிக்காவில் !!<br />
ஒளி விளக்கு மட்டுமே பிரகாசித்து<br />
எண்ணெயும், திரியுமாய் இருந்தால்<br />
இருள் அகன்று ஒளி பிறப்பது போல<br />
இன்னல் அகன்று வாழ்வு பிரகாசிக்குமென<br />
வாழ்த்தி வழி காட்ட <br />
என்னவளுடன் என் முதல் தீபாவளி<br />
நம்பிக்கை ஊட்டும் ஒளி காட்டும் வழி !!<br />
நானிலத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டும்<br />
ஒளி காட்டும் நல்வழி !!<br />
<br />
<span style="color: blue;">இக்கவிதை '<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html">ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி</a>'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது.</span></div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-75601575504854744482013-08-10T18:04:00.000-04:002013-08-11T00:17:43.603-04:00எனது முதல் பதிவின் சந்தோஷம் - தொடர் பதிவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எனது முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவை எழுத என்னை அழைத்த அன்பு நண்பர் கிரேஸ்க்கு நன்றி :).<br />
<div>
<br /></div>
<div>
பதிவுலகம் வந்த இரண்டு ஆண்டுகளான பின்னும் நான் இது வரைக்கும் எழுதின பதிவுகள் 39 தான். மற்ற பதிவுலக நண்பர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது மிக மிக குறைவு என்றாலும் <a href="http://covaiveeran.blogspot.com/2011/07/blog-post.html">2-3 பதிவுகளாவது</a> எழுத வேண்டும் என்று தொடங்கிய எனக்கு 39 என்பது சாதனையே :)</div>
<div>
<br /></div>
<div>
சரி.. கதைக்கு வருவோம். எனக்கு எப்படி இந்தப் பதிவு ஆர்வம் வந்தது??.. எல்லாரும் வானத்தை பார்த்துகோங்க,
ஒரு சின்ன பிளாஷ்பேக் போக போறோம் :)</div>
<div>
<br /></div>
<div>
பள்ளி படிப்பு முடிச்சு ஒரு 10 வருஷம் இருக்கும். முக்கியமா சொல்லணும்னா தமிழ்ல எழுதி 10 வருஷம் இருக்கும். ஒரு நாள் அப்பா வந்து, "TNEBக்கு கரண்ட் இணைப்பு வாங்க தமிழ்ல ஒரு அனுமதி கடிதம் எழுதணும், சீக்கிரம் எழுதி கொடு" என்று சொல்லிட்டு போயிட்டாரு. நானும் எழுத ஆரம்பித்தேன். அம்மாடியோவ் !! எவ்வளவு தப்பு, எந்த 'ல' போடணும்னு குழப்பம், எந்த 'ண' போடணும்னு குழப்பம் எந்த 'ர' போடணும்னு குழப்பம். இப்ப நினைச்சாலும் வெட்கமா இருக்கு. அப்ப தான் தெரிந்தது நான் தமிழ்ல எவ்வளவு மோசமா போயிட்டு இருக்கேன்னு. இத்தனைக்கும் சொன்னா சிரிப்பிங்க, 12 ஆம் வகுப்பில் எங்கள் பள்ளியில் நான் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றவன். அப்பா வந்து "என்னடா தமிழ்ல எழுத இவ்வளவு தடுமாறேனு" கேட்டப்ப சுருக்குனு வலிச்சது. இதை சரி செய்ய ஒரே வழி தமிழில் எழுதி கொண்டே இருப்பது தான் என்று முடிவு செய்தேன். கையில் எந்த காகிதம் கிடைத்தாலும் தமிழில், எனக்கு தெரிந்த திருக்குறள், பாடல் வரிகள், கட்டுரைகள்னு எதாவது எழுதிகிட்டே இருப்பேன். அப்புறம் ஒரு 2 வருடம் கழித்து என் நண்பர் கிரேஸ் அவர்களின் <a href="http://innervoiceofgrace.blogspot.com/">பதிவுகளை</a> தற்செயலாக காண நேர்ந்த பொழுது, "அட இது நல்லா இருக்கே, நாம் தமிழ் கூட எப்பவும் இருக்கலாமே, நானும் இதை பண்ணா என்னனு தோணுச்சு". <a href="http://covaiveeran.blogspot.com/2011/07/blog-post.html">முதல் பதிவில்</a> கிரேஸ் அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கி விட்டு <a href="http://covaiveeran.blogspot.com/2011/08/blog-post.html">ராஜா ராஜ சோழனுடன் </a>தொடங்கியது எனது வலையுலக பயணம் :). </div>
<div>
<br /></div>
<div>
அவ்வளவு தாங்க பிளாஷ்பேக் .. இப்ப நீங்க தரையை பாக்கலாம் :)</div>
<div>
<br /></div>
<div>
ஏன்டா தமிழ்ல கொலை பண்றேனு சில திட்டுகள் வந்தாலும், </div>
<div>
<div>
பல நண்பர்களின் தொடர் ஊக்கம் என்னையும் <a href="http://covaiveeran.blogspot.com/2012/03/blog-post.html">காமராஜர்</a>, <a href="http://covaiveeran.blogspot.com/2012/02/blog-post.html">மகாகவி</a>, <a href="http://covaiveeran.blogspot.com/2012/11/idaothikeetu.html">இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும் </a>உள்ளிட்ட கட்டுரைகளும், </div>
<a href="http://covaiveeran.blogspot.com/2012/08/blog-post_13.html">விழித்து எழு தமிழா</a>, <a href="http://covaiveeran.blogspot.com/2013/03/blog-post.html">குழந்தை தொழிலாளி</a>, <a href="http://covaiveeran.blogspot.com/2013/02/blog-post.html">மாய உலகம்</a> உள்ளிட்ட கவிதைகளையும் எழுத வைத்தது. என் தமிழை சீர் செய்ய வேண்டும்<br />
என்ற வெறியுடன் தொடங்கிய இந்த முயற்சி, சக பதிவர்களின் படைப்புகளின் தாக்கத்தினால் இப்பொழுது விரிந்து தமிழின் சுவையை முழுவதுமாக சுவைக்க வேண்டும் என்பதை நோக்கி செல்ல தொடங்கி விட்டது.<br />
<br />
நான் வாழ்க்கைல செய்த உருப்படியான காரியத்தில் இதுவும் ஒன்று என்ற மனநிறைவினை தருகிறது. எனவே, நீங்க போதும் நிறுத்துடானு சொன்னாலும் தொடர்ந்து எழுதுவேன். :). </div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-35968783595578136832013-08-01T21:49:00.000-04:002013-08-01T21:49:17.299-04:00இதயம் வரையும் மடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என்னவளுக்கு என் இதயம் வரையும் மடல் --<br />
<br />
நிழலென என்னுடன் வரவிருக்கும் என்னவளே,<br />
இன்னுயிருடன் இணையவிருக்கும் இனியவளே,<br />
காலங்கள் அனைத்தையும் வசந்த காலமாக மாற்றவிருப்பவளே,<br />
சூறாவளியையும் தென்றலாக வீச வைப்பவளே,<br />
இருளை அகற்ற வந்த வெண்ணிலாவே,<br />
வாழ்க்கையை மணக்கச் செய்ய வந்த மல்லிகையே,<br />
தனிமை சிறையிலிருக்கும் எனை விடுவிக்க வந்த தாரகையே,<br />
நெடும் பயணத்திற்கு துணையாய் வரவிருக்கும் என் பாதியே,<br />
என்னை என்னிடமிருந்து திருடியதற்கு தண்டனையாக,<br />
உனை எனில் சிறை வைக்கப் போகிறேன் <br />
நம் திருமணத்தின் மூலம்... </div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-79051066702678451452013-07-02T23:42:00.001-04:002017-05-30T16:16:42.093-04:00மூடர்கள், பகுத்தறிவாளிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தெய்வங்களைச் சிலையாக உருவகப்படுத்தி <br />
வணங்குபவர்கள் மூடர்கள்,<br />
தங்கள் தலைவரைச் சிலையாக உருவகப்படுத்தி<br />
வணங்குபவர்கள் பகுத்தறிவாளிகள் !!.<br />
<br />
கீதைப் படி அன்பு வழி நடக்க <br />
முற்படுபவர்கள் மூடர்கள்<br />
தங்கள் தலைவரின் சொற்படி கோவிலையும் இடிக்க<br />
முற்படுபவர்கள் பகுத்தறிவாளிகள் !!<br />
<br />
மந்திரங்கள் ஓத கடவுள் சாட்சியாக திருமணம் <br />
செய்பவர்கள் மூடர்கள்,<br />
சம்பிரதாய பேச்சுடன் தங்கள் தலைவர் சாட்சியாக திருமணம் செய்பவர்கள் பகுத்தறிவாளிகள் !!<br />
<br />
கடவுளின் பெயரால் நற்செயல்<br />
செய்தாலும் மூடர்கள்,<br />
தலைவரின் பெயரால் நற்செயல் <br />
செய்தால் மட்டுமே பகுத்தறிவாளிகள் !!<br />
<br />
செயல் ஒன்று அர்த்தம் மட்டும் ஏனோ இரண்டு <br />
<br />
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மூடர்கள்,<br />
'தலைவன்' நம்பிக்கை கொண்டவர்கள் பகுத்தறிவாளிகள்,<br />
என்ற இந்த பார்வை <span style="background-color: rgba(255, 255, 255, 0); text-align: -webkit-auto;">கொண்டவர்கள் என்று மாறுவார்கள் ?? </span></div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-4119969283380152013-05-12T22:33:00.001-04:002013-05-13T09:14:00.889-04:00சங்க இலக்கியச் சுவையைத் தேடி முதல் படி...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் வலைப்பதிவு தொடங்கிய பொழுது சங்க இலக்கியம் குறித்து <br />
பதிவு எழுதும் அளவிற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. <br />
<br />
பள்ளியில் சங்கப் பாடல்களை படிக்கும் பொழுது, மதிப்பெண் பெற வேண்டும் என்று நோக்கத்தில் மனப்பாடம் செய்தேனே தவிர ரசித்தோ, புரிந்தோ படிக்கவில்லை. " சங்கப் புலவர்கள் அவங்க பாட்டுக்கு எழுதிவிட்டு போய்ட்டாங்க யார் மனப்பாடம் செய்து எழுதுவது" என்று பல நேரங்களில் சங்கப் புலவர்களை கூட கடிந்து கொண்டது உண்டு. ஆண்டு தோறும் முப்பது குறள்களை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற காரணத்தினால் திருவள்ளுவரை கூட கடிந்து கொண்டது உண்டு.(தமிழ் அறிஞர்கள் என்னை மன்னிக்கவும் :)). <br />
<br />
ஆனால் இன்று திரும்பி பார்க்கும் பொழுது இவ்வளவு செழுமையான இலக்கியத்தை நான் எப்படி ரசிக்காமல் இருந்தேன் என்று நினைத்தால் சற்று வெட்கமாக இருக்கிறது. மதிப்பெண்ணை குறிவைத்தே ஓடியதால் சங்க இலக்கியத்தின் செழுமையை காணத் தவறி விட்டேன். இன்றோ மதிப்பெண் இல்லை, பரீட்சை இல்லை, தேடல், ஆர்வம் மட்டும் உள்ள காரணத்தினால் சங்க இலக்கியத்தின் செழுமையையும், அதில் இருக்கும் இனிமையும் உணர முடிகிறது. <br />
<br />
எனது நண்பர் <a href="http://thaenmaduratamil.blogspot.com/">கிரேஸ்</a> அவர்கள் கொடுத்த ஊக்கமும், அவரது சங்க இலக்கியம் குறித்தப் <a href="http://thaenmaduratamil.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பதிவுகளும்</a>, எனது இந்த மாற்றத்திற்கும், என் தமிழ் தேடலுக்கும் மிக முக்கிய காரணம். எனவே, அவருக்கு என் நன்றிகளை கூறிக் கொண்டு, முனைவர் இரா. ருக்மணி அவர்கள் எழுதிய <em>"முல்லைப் பாட்டும், பண்டைத் தமிழகமும்"</em> என்ற புத்தகத்தின் மூலம் நான் ரசித்த முல்லைப்பாட்டிலிருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை, விளக்கவுரையுடன் இங்கு பகிர்கிறேன், உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு :) <br />
<br />
<strong>ஆசிரியர் - நப்பூதனார்</strong><br />
<strong>கார்ப்பருவத்தில் செழித்திருக்கும் முல்லைநிலம்</strong><br />
<em><span style="color: red;"> .................................................................அயிர<br />செறி இலைக் காயா அஞ்சனம் மலர<br />முறி இணர்க் கொன்றை நன் பொன் கால<br />கோடல் குவி முகை அங்கை அவிழ<br />தோடுஆர் தோன்றி குருதி பூப்ப<br />கானம் நந்திய செந்நிலப் பெருவழி<br />வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்<br />திரி மருப்பு இரலையொடு மடமான் உகள<br />எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் </span></em><br />
<br />
<strong>விளக்கவுரை </strong> - <br />
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக் <br />
கொண்டக் காயா மலர் மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், மலர் இதழ் நிறைந்த செங்காந்தள் உதிரம் நிறத்தில் மலர்ந்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக் குதித்து விளையாடும். இத்தகைய முல்லைநிலத்து, எதிரே செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார் காலத்தில். <br />
<br />
மலர்ந்து மணம் வீசும் காயா, செங்காந்தள் போன்ற மலர்கள் மூலம் முல்லை நிலத்தின் அழகையும், தவறாமல் பெய்யும் மழையினால் விளைந்த கதிர் மூலம் முல்லை நிலத்தின் செழுமையும், துள்ளித் திரியும் மான்கள் மூலம் முல்லை நிலத்தில் குடி கொண்டுள்ள மகிழ்ச்சியையும் ஒரு சேர அழகாக எடுத்தக் காட்டுகிறது இந்த அற்புதமான பாடல். <br />
<br />
மற்றுமொரு என் மனம் கவர்ந்த பாடல்... <br />
<br />
<strong>பாசறையில் காவலாளர்</strong><br />
<span style="color: red;"><em>நெடு நா ஒண் மணி நிழத்திய நடு நாள்<br />அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்<br />சிதர் வரல் அசை வளிக்கு அசை வந் தாங்கு<br />துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்<br />பெரு மூதாளர் ஏமம் சூழ </em></span><br />
<br />
<br />
<strong>விளக்கவுரை </strong><br />
நீண்ட நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய நடுயாமம்.அப்பொழுதில் காட்டு மல்லிகைப் பூத்திருக்கும் ஆடுகின்ற மல்லிகைக் கொடியின் சிறு தூறுகள், நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு அசைவதைப் போல – தலையில் தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர் தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு பாதுகாவலைச் செய்தனர்.<br />
<br />
உழைத்து களைத்த காவலரின் நிலையை காற்றில் ஆடும் <br />
மல்லிகை கொடியுடன் உவமைப்படுத்திய ஆசிரியர் நப்பூதனாரின் கற்பனையை என்னவென்று சொல்வது. வகுப்பறையில் எனது நிலைமையை நினைவுப் படுத்திவிட்டார். :)<br />
<br />
மேலும் முல்லைப்பாட்டின் பல பாடல்களையும், அதற்கான விளக்கவுரைகளையும் இந்த தளத்தில் <a href="http://learnsangamtamil.com/mullaipattu/">http://learnsangamtamil.com/mullaipattu/</a> காணலாம்.</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-55870420723429754112013-04-13T22:45:00.000-04:002013-04-17T06:18:13.887-04:00தமிழ்ப் புத்தாண்டும், குழப்பமும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழ்ப் புத்தாண்டு எந்த நாள் என்று கடந்த சில ஆண்டுகளாக ஒரு குழப்பம் நம்மிடையே நிலவுகிறது. தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும், 'இல்லை!! இல்லை' சித்திரை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும் சொல்லி வருகிறார்கள்.<br />
<br />
எது நம்மப் புத்தாண்டு என்று ஒரு அலசு அலசுவோமா?<br />
<br />
தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சொல்பவர்கள் வைக்கும் முக்கியமானக் காரணங்கள் இதோ....<br />
<br />
1. 1921 ஆம் ஆண்டு தமிழ்ப் பண்டிதர்களான மறைமலை அடிகள்,<br />
திரு.வி.க. சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், <br />
கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் கூடி தை மாதம் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் ஆண்டினை (திருவள்ளுவர் காலம் கி.மு. 31, வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு) பின்பற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தனர் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். <br />
<br />
2. குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கி, அதனைத் தமிழர்கள் மீது திணித்தான் என்றும், பிரபவ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும் ஆண்டுகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான் என்பதே இதற்குச் சாட்சி என்றும் கூறுகின்றனர்.<br />
<br />
இவற்றைப் பார்க்கும் பொழுது "அட, சரியாத் தான் சொல்றாங்க" என்று தோன்றியது. உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா?. சரி சரி முடிவு செய்யும் முன் இன்னொருத் தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டாமா? தொடர்ந்து படிங்க...<br />
<br />
இதோ சித்திரை முதல் நாளே புத்தாண்டு என்றுக் கூறுபவர்களின் வாதம்...<br />
<br />
1. தமிழர்களின் ஆண்டு முறை சூரியன் கொண்டு வரையறுக்கப்பட்டது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறைச் சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம்(மேஷம்), 2. இடபம்(ரிஷபம்) , 3. மிதுனம், 4. கர்க்கடகம்(கடகம்), 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்தரையாகும். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-gG31uEAP-s0/UWmbXOhkwxI/AAAAAAAAB84/5H9Sr7ALU1c/s1600/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bua="true" src="http://3.bp.blogspot.com/-gG31uEAP-s0/UWmbXOhkwxI/AAAAAAAAB84/5H9Sr7ALU1c/s1600/untitled.bmp" /></a></div>
<span style="background-color: blue;"></span>(<span style="color: blue;">நன்றி: விக்கிப்பிடியா) </span><br />
<br />
2. ஒரு ஆண்டு இளவேனில்(சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாசி), கூதிர் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி(மார்கழி, தை), பின்பனி(மாசி, பங்குனி) என ஆறுப் பருவங்களைக் கொண்டது. வசந்தம் வரும் இளவேனில் காலம் தொடங்கும் சித்திரை மாதத்தைப் புத்தாண்டாய் கொள்வது தான் சரி என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். <br />
<br />
3. சூரியனை ஆதாரமாகக் கொண்ட மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா போன்ற வேறு மாநிலத்தவரும், நேபாளம், பர்மா, கம்போடியா போன்ற வேறு நாட்டவரும் சித்தரை ஒட்டியேத் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.<br />
<br />
4. அகத்தியரும் பன்னிராயிரத்தில், பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.<br />
<br />
5. ஜாதகமும், ஜோசியமும் சித்தரைப் புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டதே. <br />
<br />
6. 1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ்ப் பண்டிதர்கள் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது உண்மையானால், இத்தனை வருடங்களாகியும் அது நடைமுறைப் படுத்தப்படாதது ஏன்?<br />
<br />
7. வடமொழிப் பெயர்கள் கொண்ட ஆண்டுகள் நெருடலை தரும் பட்சத்தில், கால அட்டவணை மாற்றுவதற்குப் பதில் வடமொழி ஆண்டுகளுக்கு இணையானத் தமிழ்ப் பெயர்களை தேடலாமே? என்று நினைத்த பொழுது, இந்த படத்தைக் காண நேர்ந்தது. அழகாக 60 ஆண்டுகளுக்கும் இணையானத் தமிழ்ப் பெயர் தொகுக்கப்பட்டுள்ளது.<br />
இந்த பெயர்கள் வழக்கத்தில் கொண்டு வர முயற்சி செய்தால் போதுமானது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-az8ynYTp93U/UWsQcetIajI/AAAAAAAAB9I/g6_2f1WhWtw/s1600/531813_503147929745575_1763090173_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" bua="true" height="365" src="http://4.bp.blogspot.com/-az8ynYTp93U/UWsQcetIajI/AAAAAAAAB9I/g6_2f1WhWtw/s400/531813_503147929745575_1763090173_n.jpg" width="400" /></a></div>
<br />
இவை அனைத்தும் பார்க்கும் பொழுதுச் சித்தரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற வாதமே ஏற்புடையதாக உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமில்லாது உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் பொதுவான திருநாள். அது குறித்து எந்த முடிவாயினும் தமிழகம் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதுச் சரியல்ல. <br />
<br />
சித்தரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது பல நூறு வருடங்களாகக் கொண்டாடி வரும் ஒரு வழக்கம். அதை திடீரென்று எப்படி மாற்றிக் கொள்ள முடியும். மாற்றுவதால் யாருக்கு என்னப் பயன்? மாற்ற நினைத்தால் குழப்பம் தானே வரும்.<br />
<br />
எனவே தேவையற்ற குழப்பத்தைத் தவிர்த்து நம் புத்தாண்டு சித்திரை முதல் நாளே என்பதில் உறுதியாய் இருப்போம். <br />
<br />
<span style="color: red;"><strong>அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். </strong></span><br />
<br />
விஜய வருடம் இனிதே விஜயமாகட்டும் :)</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-63221623976695871262013-04-04T22:26:00.000-04:002013-04-13T18:29:00.330-04:00நீயின்றி அணுவும் அசைவதில்லை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் வாழ்வூதியம் தரும் முதலாளியானாய்,<br />
என் தனிமைக்குத் துணையானாய்,<br />
என் பயணம் எங்காயினும் வரும் பயணியானாய்,<br />
என் தமிழ் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகமானாய்,<br />
விடியல் தொடங்கி இரவு வரை என்னுடனே இருக்கும் நிழலானாய்,<br />
கையிலிருந்தபடி அறிவினைத் தரும் ஆசானானாய்.<br />
<br />
இவை அனைத்துமாகி எனை உன்னிடத்தில் சிறை வைத்தாய்,<br />
சக மனிதர்களிடம் பழகுவதை குறைக்க வைத்தாய்.<br />
உன்னை விட்டு போய்விடுவேன் என்ற பொறாமையா?<br />
என்னையும் உன்னைப் போல எந்திரமாக்கிவிட்டாய். <br />
<br />
நீ நல்லவனா? வல்லவனா? கொடியவனா? <br />
தெரியவில்லை.. ஆயினும் <br />
நீயின்றி அணுவும் அசைவதில்லை எனக்கு, <br />
என் கணினியே!! நீயின்றி உலகில்லை எனக்கு !!<br />
<br />
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-79009065136600682412013-03-22T00:44:00.000-04:002013-04-13T18:30:43.903-04:00இதுவும் நடக்கும்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இலங்கை தமிழர் நலனுக்காக உலக நாடுகள் பாடுபடும், <br />
இந்தியாவில் பெருகி கிடக்கும் ஊழல் ஒழியும், <br />
இந்திய அரசு தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும், <br />
அரசு அலுவலங்களில் லஞ்சமின்றி வேலை நடக்கும், <br />
வரி ஏயப்பு என்பது இல்லாமல் போகும், <br />
தமிழகத்தில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும், <br />
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கும், <br />
கர்நாடகம் உரிய காவேரி நீரைத் தமிழகத்திற்கு திறக்கும், <br />
பள்ளிகள் முறையான கட்டணம் வசூலிக்கும், <br />
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்கும், <br />
எளியோருக்கும் கருத்துரிமை கிடைக்கும், <br />
இவை எல்லாம் நடக்கும்,<br />
இதற்கு மேலும் கூட நடக்கும். <br />
உலகம் மறுபடியும் பிறந்து வந்தால் !!</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-90696002722561874152013-03-21T22:23:00.000-04:002013-04-13T18:32:02.181-04:00உயிர் மொழி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>அ</strong>ன்பு நிறைந்த மொழி, <br />
<strong>ஆ</strong>ண்டவன் அருளிய மொழி, <br />
<strong>இ</strong>லக்கணமில்லா மொழி, <br />
<strong>ஈ</strong>டு இணை இல்லா மொழி, <br />
<strong>உ</strong>வகை தரும் மொழி, <br />
<strong>ஊ</strong>ரார் அனைவரையும் மயக்கும் மொழி, <br />
<strong>எ</strong>ளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி, <br />
<strong>ஏ</strong>க்கம் தீர்க்கும் மொழி, <br />
<strong>ஐ</strong>யமேதும் எழா மொழி,<br />
<strong>ஒ</strong>ளிவு மறைவற்ற மொழி, <br />
<strong>ஓ</strong>ங்கார இசையினும் இனிய மொழி, <br />
<strong>ஔ</strong>வை ரசித்த மொழி, <br />
அ<strong>ஃ</strong>தே.. மழலை மொழி !!..<br />
<br /></div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-71898968875332426992013-03-16T17:17:00.001-04:002014-08-02T13:59:06.634-04:00குழந்தை தொழிலாளி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-ZGzSEXo3VHw/UUTOlyPd_CI/AAAAAAAAB74/JbqY4iK_e94/s1600/child_jpeg_pagespeed_ce_e0nEt4iON8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-ZGzSEXo3VHw/UUTOlyPd_CI/AAAAAAAAB74/JbqY4iK_e94/s400/child_jpeg_pagespeed_ce_e0nEt4iON8.jpg" height="265" psa="true" width="400" /></a></div>
<br />
<br />
கல் நெஞ்சம் கொண்டவர்களிடம்<br />
கல் உடைக்கிறேன்,<br />
<br />
கடனாளி பெற்றோரிகளின் <br />
கடன் தீர்க்கும் பொருளாகிறேன்,<br />
<br />
படிப்பின் மூலம் ஒளி தருவதை விடுத்து <br />
பட்டாசின் மூலம் ஒளி தருகிறேன்,<br />
<br />
ஓடியாடி விளையாடாமல் பணத்தாசை ம(மா)க்களுக்காக <br />
ஓடியாடி உழைக்கிறேன்,<br />
<br />
சிறப்பான கல்வியினை நோக்கி ஓட ஆசை கொண்டும்<br />
சில்லறை தேடி ஓட வற்புறுத்தப்படுகிறேன்,<br />
<br />
ஈரமற்ற முதலாளியின் பாத்திரங்களை கண்களின் <br />
ஈரம் கொண்டு கழுவுகிறேன்,<br />
<br />
ஆயிரமாயிரம் கண்கள் என்னை கடந்த போதும் <br />
ஆண்டவன் மட்டுமே துணையாக வருகிறான்,<br />
<br />
பரிதவிக்கும் கண்கள் கூட இரக்கப் பார்வை மட்டுமே <br />
பரிசாகத் தருகின்றன,<br />
<br />
இரக்கமற்ற சமுதாயமே.. மனம் இறங்கி கேட்கிறேன்<br />
இறுக்கம் தளர்த்தி உதவ மாட்டாயா?<br />
<br />
கருவறையிலிருந்து வெளிப்பட்ட முதல் உழைக்கிறேன்<br />
கண் கொண்டு பார்க்க மாட்டாயா?<br />
<br />
என் கதறலை உன் செவி கேட்க மறுக்கிறதா ?<br />
என் நிலை மேன்பட ஏதேனும் செய்ய மாட்டாயா?<br />
<br />
<i><span style="color: red;">இந்த கவிதைக்கு அட்லாண்டா மாநகர தமிழ் சங்கத்தின் கவிதை போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்தது </span></i><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-uOpkh0EJRJU/U90mvX6diqI/AAAAAAAAF1o/YdH7YhYzV70/s1600/photo.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-uOpkh0EJRJU/U90mvX6diqI/AAAAAAAAF1o/YdH7YhYzV70/s1600/photo.JPG" height="300" width="400" /></a></div>
<br />
<br /></div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-37680089305069104522013-02-01T17:59:00.001-05:002013-04-13T18:33:17.954-04:00மாய உலகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-WaBn_AAliiU/UQxC6gbcCII/AAAAAAAAB2Q/fnxwZj9VK6g/s1600/MysteryBox-4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ea="true" height="238" src="http://1.bp.blogspot.com/-WaBn_AAliiU/UQxC6gbcCII/AAAAAAAAB2Q/fnxwZj9VK6g/s320/MysteryBox-4.jpg" width="320" /></a></div>
<br />
என் விழித்திரையில் விழும் காட்சிகள், <br />
என் நரம்பு மண்டலம் உணரும் உணர்ச்சிகள்,<br />
என் செவி மடல் கேட்கும் ஒலிகள்,<br />
இவை மட்டும் தான் நிஜமோ?<br />
மற்ற அனைத்தும், அனைவரும் மாயையோ?<br />
என் குடும்பத்தாரும், நண்பர்களும் கூட மாயையோ?<br />
இல்லையெனில், ஏனையோரின் உணர்ச்சியை <br />
ஏன் என்னால் உணர முடியவில்லை?<br />
அவர்களின் உலகத்தை ஏன் என்னால் காண முடியவில்லை?<br />
மாயையெனில், நான் மட்டும் இந்த உலகத்தில் தனியோ?<br />
உலகத்தில் அனைத்தும் எனக்காகப் படைக்கப்பட்டதோ?<br />
உலகத்திற்கு என்னைத் தனியாக அனுப்பிய <br />
கடவுளின் நோக்கம் தான் என்னவோ?<br />
இல்லை இந்த கேள்விகள் எல்லாம் நான் பித்துப்பிடித்தவனாக <br />
மாறிக் கொண்டு இருக்கிறேன் என்பதற்கான அறிகுறியோ?<br />
இந்த கேள்விகளுக்கு பதில் தருவோர் <br />
யாருமுண்டோ இந்த உலகத்தில்.... மாய உலகத்தில் !!</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-81083218075907537602013-02-01T17:51:00.000-05:002013-04-13T18:33:51.927-04:00ஓட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-OVPWOI8BTWw/UQxE6xkhFzI/AAAAAAAAB2c/1-4mJRn3lHk/s1600/running%2520logo.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ea="true" height="240" src="http://4.bp.blogspot.com/-OVPWOI8BTWw/UQxE6xkhFzI/AAAAAAAAB2c/1-4mJRn3lHk/s320/running%2520logo.png" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
சிறுவயதில் விளையாட்டை மறந்து <br />
தரவரிசை(ரேங்க்) நோக்கி ஓட்டம்,<br />
பருவ வயதில் சுயவிருப்பத்தை மறந்து<br />
'காகித' பட்டம் நோக்கி ஓட்டம்,<br />
பட்டம் பெற்றவுடன் படித்த படிப்பை மறந்து <br />
'கணினி' வேலை நோக்கி ஓட்டம்,<br />
பின் குடும்பத்தைப் பிரிந்து <br />
பதவி உயர்வு நோக்கி ஓட்டம்,<br />
இன்று தாய்நாட்டை துறந்து<br />
பணத்தை நோக்கி ஓட்டம், <br />
எதற்காக இந்த தொடர் ஓட்டம்? <br />
யாருக்காக இந்த ஓட்டம்?<br />
எதை நோக்கி இந்த இலக்கிலா ஓட்டம்?<br />
எங்கே நிற்கும் இந்த ஓட்டம்?</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-43860231232860705112012-11-28T07:12:00.002-05:002013-04-13T18:34:36.821-04:00இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<b>சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு</b> - இன்று பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடயம். முதலில் இடஒதுக்கீடு கொண்டு வந்தற்கான காரணத்தைப் பார்போம். Dr.அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனம் வகுத்த பொழுது பல்வேறு துறைகளிலும் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். நம் முன்னோர்கள் தொழில்வாரியாகச் சமூகத்தினை பல பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தனர். காலப்போக்கில் சில சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுத்து, சில சமூகத்தினரை உயர் சாதி எனவும், வேறு சிலரை கீழ் சாதி எனவும் பார்க்கும் பழக்கம் உருவானது. ஆங்கிலேய ஆட்சியில் இந்த வேற்றுமை பன்மடங்கு பெருகியது. இதன் காரணமாகச் சில பிரிவு மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்தனர். எனவே, சுதந்திரம் அடைந்தவுடன் இந்த நிலை மாற, அனைவரையும் ஒரே நிலைக்கு கொண்டு வர இடஒதுக்கீடு Dr. அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்பட்டது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<br /></div>
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
நாம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகிய இன்றைய சூழலில் இது தேவையானதா?என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை இது தேவையானதே.</div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
இன்றளவும் நம் சமூகத்தில் சாதி அடிப்படையில் ஒரு பிரிவு மக்களை அடக்கி ஆளும் அசட்டுத்தனம் இருக்கத்தான் செய்கிறது. நகர்புறங்களில் ஒரு அளவு குறைந்து இருந்தாலும், கிராமப்புறங்களில் வெகுவாக இருக்கத்தான் செய்கிறது. எனவே,அவர்கள் மேலே ஏறி வர, வெளி உலகம் பற்றி அறிய, தங்கள் ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து போராட இடஒதுக்கீடு என்ற துணை அவர்களுக்குத் தேவை. பல நேரங்களில் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டை நாம் காணத்தவறுகின்றோம். இடஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைத்து என்னுடன் பயின்ற நண்பர்கள் பலர் இன்று நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் பெற்ற தகுதி மதிப்பெண் குறைவாக இருந்து இருக்கலாம். ஆனால் அவர்கள் வந்த சூழலைப் பற்றி அறியும் பொழுது தான் அவர்கள் மதிப்பெண்னின் உண்மையான மதிப்பை உணர முடிகிறது. இது போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மேலே வருவது அவர் சார்ந்த சமூகத்திற்கு ஒரு உத்வேகத்தை தரும். அந்த சமூகமே முன்னேற அது ஒரு வாய்ப்பாக அமையும். அனைவரையும் ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கும் நாள் வரும் வரையில் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும்.</div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
இவ்வளவு வலிமை வாய்ந்த இடஒதுக்கீடு என்ற சக்தி இன்று சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை எனபதே கசப்பான உண்மை. அதன் காரணமாகவே பலரும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இடஒதுக்கீட்டை வைத்து சமூகத்தை முன்னேற வழிவகை காணாமல், அதை வைத்து ஓட்டு வங்கியை பெருக்கும் அரசியல் தான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. இடஒதுக்கீடு அமலில் இருந்து 65 ஆண்டுகளாகியும், இடஒதுக்கீட்டினால் பயன்பெற்றவர்கள் ஏராளமாக இருந்தும், இடஒதுக்கீடு குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீட்டை பிறப்புரிமை போல பலரும் கருதுவது. தங்கள் சமூகம் வளர்ச்சி அடைந்த பின்னரும் தங்களுக்கான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய எவரும் தயாராக இல்லை. </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
எனவே, அரசே முன் வந்து ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட காலத்திற்கு (5 ஆண்டோ, 10 ஆண்டோ)ஒரு முறை அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு மக்கள் நலன் ஒன்றே பேணும் தலைவர்கள் நம்மிடையே உருவாக வேண்டும். பொதுமக்களாகிய நாமும் நமக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கும், இடஒதுக்கீடுக்கும் நாம் தகுதியுடையவரா? என்று சுயபரிசோதனை செய்து அதற்கேற்ப செயல்பட்டால் இடஒதுக்கீட்டின் பயன்பாட்டினை நம் சமூகம் முழுமையாக உணர முடியும்.</div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
மாறாக இவை நடக்காவிட்டால்,இடஒதுக்கீடு வழங்கியதற்கான</div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
நோக்கம் அடிப்பட்டு, சமதர்ம சமத்துவ சமுதாயம் என்றுமே ஒரு எட்டாக்கனியாகவே இருக்கும். இடஒதுக்கீட்டின் சக்தியை உணர்ந்து, அதனை ஒழிக்க முனையாமல், அதனை சீர்திருத்த முயல்வோம். அதன் மூலம் சமதர்ம சமத்துவ சமுதாயம் உருவாக்குவோம் !!</div>
</div>
</div>
</div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-70082043842644304882012-10-31T06:15:00.000-04:002013-04-13T18:35:23.414-04:00நவீன நவரசம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-udtsO63lyjU/UJDoUGcXjsI/AAAAAAAAB0E/KO4JMCB2L1M/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="342" src="http://2.bp.blogspot.com/-udtsO63lyjU/UJDoUGcXjsI/AAAAAAAAB0E/KO4JMCB2L1M/s400/images.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
மின்வெட்டு குறித்து நமது முதல்வரும், முன்னாள்<br />
முதல்வரும் பேசும் பேச்சைக் கேட்கும்<br />
பொழுது <b>நகை </b>உணர்வு,<br />
<br />
மின்வெட்டு காலத்திலும் வரும் மின் கட்டணம்<br />
பார்க்கும் பொழுது <b>அழுகை </b>உணர்வு,<br />
<br />
மின்வெட்டுக்கு காரணமான ஆட்சியாளர்களைப் பற்றி<br />
பேசும் பொழுது <b>இளிவரல் (இகழ்ச்சி) </b>உணர்வு,<br />
<br />
மின்வெட்டால் பாதிக்கப்படும் சிறு தொழிலாளர்களை<br />
நினைக்கும் பொழுது <b>மருட்கை(மயக்க)</b> உணர்வு,<br />
<br />
இன்னும் எத்தனை நாள் மின்வெட்டு நீடிக்கும் என்று<br />
நினைக்கும் பொழுது <b>அச்ச</b> உணர்வு,<br />
<br />
'கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தா சரியாகிவிடும்' என்று ஆட்சியாளர்கள் கூறியதை நம்பியதை நினைக்கும்<br />
பொழுது <b>வெகுளி</b> உணர்வு,<br />
<br />
நமக்கு மின்சாரம் இல்லாத போதும், நமது தொகுப்பில் இருந்து<br />
அண்டைய மாநிலத்திற்கு செல்லும் மின்சாரத்தை குறைக்காமல்<br />
இருப்பதை நினைக்கும் பொழுது <b>பெருமித </b>உணர்வு,<br />
<br />
போன மின்சாரம் திரும்பி வரும் பொழுது<br />
<b>உவகை (மகிழ்ச்சி) </b>உணர்வு,<br />
<br />
என்றுமே மின்வெட்டில் இருக்கும் பல்லாயிரம்<br />
மக்களைப் பற்றி நினைக்கும் பொழுது <b>அமைதி </b>உணர்வு,<br />
<br />
என நவரசத்தையும் தருகிறது (தமிழக) மின்சாரம் !!</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-66215262723563274622012-10-25T13:04:00.000-04:002013-04-13T18:37:17.880-04:00மழை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-qUVLe6Ah5WY/UIlgKsCCDNI/AAAAAAAABz0/72y8SzB3Pvo/s1600/Rain_ot_ocean_beach.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="265" src="http://1.bp.blogspot.com/-qUVLe6Ah5WY/UIlgKsCCDNI/AAAAAAAABz0/72y8SzB3Pvo/s400/Rain_ot_ocean_beach.jpg" width="400" /></a></div>
<br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">மேகங்கள் தாளமிட, </span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 1.8;">மின்னல் வான வேடிக்கைகள் படைக்க,</span><br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
சூரியன் பூமியை வானவில் கொண்டு அலங்கரிக்க,<br />
பூமி நோக்கி வரும் மழை என்னும் வெள்ளித்துளி<br />
கடவுள் நமக்கு அருளிய வரம்.<br />
அனைத்து உயிர்களின் உயிர் நாடி..</div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
இதை அறிந்ததனால் தான் என்னவோ,<br />
மழையினை கானமயில் ஆடி வரவேற்கிறது.<br />
பூச்செடிகள் பூத்துக் குலுங்கி வரவேற்கின்றன.<br />
மான்கள் துள்ளி ஓடி வரவேற்கின்றன.<br />
ஆனால் ஆறறிவு மனிதர்களாகிய நாம்<br />
மழை கண்டு ஓடி ஒளிகின்றோம்,<br />
மழை நீரை சேமிக்க மறுக்கின்றோம்,<br />
இதனை அறிந்திருந்ததனால் சூரியன் நீர் நிலைகளிலிருந்து<br />
நீரினை ஆவியாக்கி மேகங்களாக சேமித்துக்கொள்கிறது.</div>
<div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
இவை, பின் குளிர்வடைந்து மழையாக வருகிறது.<br />
ஆனால் இன்று நாம் மரங்களை வெட்டியும்,<br />
காடுகளை அழித்தும், பூமி குளிரடைவதை<br />
தடுத்து மழை வருவதை தடுக்கின்றோம்.</div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">பின் தண்ணீர் கேட்டு மற்றவர்களிடம் சண்டை இடுகி</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">ன்</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">றோம்.</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
சற்று சிந்திப்போம், மழை நீரின் மகத்துவத்தை உணர்வோம்...<br />
மரம் வளர்ப்போம்...மழை பெறுவோம்..<br />
மழை பூமிக்கு வரும் பொழுது ஓடி ஒளியாமல்<br />
வரவேற்போம்.. மகிழ்ச்சியுடன் இருப்போம் !!<br />
<i><span style="color: #444444;"><br /></span></i><i><span style="color: #444444;">(நண்பரின் <span style="line-height: 1.8;">குழந்தை பள்ளியில் கூறுவதற்காக </span>எழுதியது. இவ்வளவு பெருசா இருக்கே, ஒரு குழந்தைகிட்ட போய் வீரத்தை காட்டுறியே, பாவம் அந்த குழந்தைனு நீங்க நினைக்கிறது புரிகிறது :-))</span></i><br />
<br /></div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-42347443488794208582012-09-07T14:16:00.000-04:002013-04-13T18:39:07.923-04:00நாம் பேசும் தமிழ் (?!)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
புருக்பீல்ட்ஸ் (Brookefields) மாறி வரும் கோவையின் புதிய அடையாளம். இந்த மாற்றத்தில் மிக முக்கியமான ஒன்று கொங்கு தமிழுக்கு சாவு மணியடித்து விட்டு ஆங்கிலத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது. அதற்கு உதாரணமாக நிற்கிறது புருக்பீல்ட்ஸ்.<br />
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-_LVvRBsDVyA/UDiXA7wFyBI/AAAAAAAABzc/7wShGL5aD-c/s1600/untitled.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="170" src="http://2.bp.blogspot.com/-_LVvRBsDVyA/UDiXA7wFyBI/AAAAAAAABzc/7wShGL5aD-c/s400/untitled.bmp" width="400" /></a></div>
<br />
புருக்பீல்ட்ஸ் - கோவைக்கு விஜயம் செய்து இருக்கும் ஒரு வணிக-கேளிக்கை வளாகம் (Multiplex). சென்ற வாரம் தான் புருக்பீல்ட்ஸ் போக நேர்ந்தது, வழக்கம் போல தனியாகத் தான் :-). புருக்பீல்ட்ஸை நெருங்க நெருங்க, 'புருக்பீல்ட்ஸ்' என்ற 'ஆங்கில' எழுத்துக்கள், மின் விளக்கின் ஒளியால் மின்னி, என்னை வரவேற்றது. ஆம், கோவை இங்கிலாந்தில் அல்லவா இருக்கிறது. இங்கு ஆங்கிலம் மின்னினால் தான் மரியாதை. தமிழ் மின்னினால் அவர்கள் மரியாதை என்னாகும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் என் கண்ணில் பட்டவை குறியீடுகள். அனைத்து குறியீடுகளிலும் ஆங்கிலம் (ATM, Lift Lobby, Staircases, Escalator, More shops etc). தவறிக்கூட தமிழ் இருக்கக் கூடாது என்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பது தெரிந்தது. கோவை தமிழகத்தின் ஒரு பகுதி என்று எனது புவியியல் ஆசிரியர் தவறாகச் சொல்லி கொடுத்து இருக்கிறார் என்பது புலனானது.<br />
<br />
ஆர்.எம்.கே.வீ சில்க்ஸ், ரிலையன்ஸ் டிறேண்ட்ஸ் ஆகிய கடைகள் தவிர நான் சென்ற அனைத்துக் கடைகளிலும் என்னிடம் பேசிய முதல் மொழி (அரைகுறை) ஆங்கிலம் தான் (Do you need help?, What mode of payment Debit or Cash?, Do you need a carry bag?, This cost 500 rs). இறுதியாக 'தி சினிமாஸ்' (சதயம் சினிமாஸ் இன் கோவை கிளை) சென்றேன். அங்கும் அதே நிலைமை. நான் தமிழில் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் வந்தது ஆங்கிலத்தில். நான் என்ன பார்க்க வெள்ளைக்காரன் மாதிரியா இருக்கேன்?. முதலில் தமிழில் பேச வேண்டியது தானே அப்புறம் கேட்பவருக்குப் புரியவில்லை என்றால் வேறு ஓர் மொழிக்கு மாற வேண்டியது தானே?. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் முதலாளிகள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று கூறி இருப்பார்கள் போலும்.<br />
<br />
நம்மவர்கள் எப்பவும் நினைப்பது பகட்டான இடங்களுக்கு சென்றால் ஆங்கிலத்தில் (அரைகுறை என்றால் கூட) பேசினால் தான் மரியாதை என்று. எனவே கடை முதலாளிகளும் தங்களை பகட்டாக காட்டிக் கொள்ள ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். புருக்பீல்ட்ஸ் உம் இதற்கு விதிவிலக்கல்ல. வெகுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்த இந்த பழக்கம் சிறு நகரங்களில் ஊடுருவி, இன்று கிராமங்கள் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.<br />
<br />
இந்நிலைக்கு நாம் அனைவரும் காரணம். ஒரு மொழி நீடித்து வாழ அந்த மொழி பாமரனிடம் வாழ வேண்டும். ஆனால் தமிழ் இன்று பாமரனிடம் அழிந்து கொண்டு இருக்கிறது. நாம் நடைமுறையில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது அம்மா அப்பா பயன்படுத்தும் பல சொற்களை இன்று நம் பேச்சு மொழியில் பயன்படுத்துவது கிடையாது (வலது, இடது, தமிழ் மாதங்கள், திசைகள் இன்னும் பல). இது தொடர்ந்தால் அடுத்து வரும் சந்ததியினர் சொற்களைத் தாண்டி நம் மொழியினையே பயன்படுத்தாமல் நிறுத்தி விடுவார்கள்.<br />
<br />
அந்த ஒரு அவல நிலை வராமல் தடுக்க நாம் முடிந்த வரை தமிழில் பேசுவோம். அதற்காக தமிழ் புலவர்களாகச் சொல்லவில்லை. "இவன் என் Friend" என்று சொல்லும் இடத்தில் "இவன் என் நண்பன்" என்று சொல்லலாம். "Thanks" என்று சொல்வதற்கு பதில் "நன்றி" என்று சொல்லலாம். கைபேசி எண் சொல்லும் பொது ஒன்று, இரண்டு என்று தமிழில் சொல்லலாம். இது போன்று நம் நடைமுறை வாழ்க்கையில் வெறும் பகட்டுக்காக பேசும் ஆங்கிலச்சொற்களை தவிர்த்து தயக்கமின்றி தமிழ் சொற்களை பயன்படுத்துவோம். முடிந்த வரை தமிழில் பேச முயற்சிப்பவரையும் 'தமிழ காப்பாத்த வந்துட்டான்டா' என்று ஏளனம் செய்யாமல், அவர்களை உற்சாகப்படுத்துவோம்.<br />
<br />
தமிழக அரசும், தமிழ் அறிஞர்களும் தமிழுக்கு என்று மாநாடுகள் நடத்துவதோடு நில்லாமல் உலகின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழாக்கம் கொடுத்து, அவற்றை அகராதியில் ஏற்றி அனைத்து தமிழன் கையில் போய் சேரும் படி செய்ய வேண்டும்.<br />
<br />
இவை எல்லாம் நடந்தால் புருக்பீல்ட்ஸ்களிலும் தமிழ் வாழும். இதை செய்ய தவறினால் தமிழ் சமஸ்கிருதம் வழி சென்று வெறும் ஏட்டு மொழியாக மாறும். முடிவு நம் கையில் இல்லை இல்லை நம் நாவில் !!.</div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-28107055784027321882012-08-13T06:00:00.001-04:002013-04-13T18:40:13.152-04:00விழித்து எழு தமிழா !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-tT_0d6LZe3M/UCi-cuz-wPI/AAAAAAAAByI/XX6mW19tC50/s1600/185560_10151998489390198_668819710_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-tT_0d6LZe3M/UCi-cuz-wPI/AAAAAAAAByI/XX6mW19tC50/s400/185560_10151998489390198_668819710_n.jpg" width="400" /></a></div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 1.8;">உலகின் முதல் கப்பல் படை, </span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 1.8;">யானைப்படை</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 1.8;"> நிறுவி,</span><br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">போர்கள் பல </span><span style="line-height: 1.8;">வென்று</span><span style="line-height: 1.8;"> </span><span style="line-height: 1.8;">தரணி ஆண்ட எம் தமிழினம் !!</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
பொது மறையாம் திருக்குறள் தந்து <span style="line-height: 1.8;">உலகினுக்கு </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">வாழ்க்கை நெறியை </span><span style="line-height: 1.8;">கற்று </span><span style="line-height: 1.8;">தந்த </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் !!</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே </span><span style="line-height: 1.8;">கோள்களின் </span><br />
<span style="line-height: 1.8;">அமைப்பையும், தாக்கத்தையும் </span><span style="line-height: 1.8;">அறிந்திருந்த </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் !!</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
ஓர் அறிவு உயிர், ஈர் <span style="line-height: 1.8;">அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">டார்வினுக்கு </span><span style="line-height: 1.8;">முன்னரே உயிரின் தோற்றத்தை </span><br />
<span style="line-height: 1.8;">கூறியிருந்த </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் !!</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">உலோகம் பற்றி ஏனைய நாடுகள் அறியாத காலத்தில் </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் !!</span><br />
<span style="line-height: 1.8;">பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் </span><span style="line-height: 1.8;">கோவில் என</span><br />
<span style="line-height: 1.8;">கட்டிட</span><span style="line-height: 1.8;">க்</span><span style="line-height: 1.8;">கலையில் </span><span style="line-height: 1.8;">வியத்தகு சாதனைகள் புரிந்த </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் !!</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">அணுவின் சக்தி குறித்து </span><span style="line-height: 1.8;">பல ஆயிரம் ஆண்டுகளுக்கு</span><span style="line-height: 1.8;"> </span><br />
<span style="line-height: 1.8;">முன்னரே </span><span style="line-height: 1.8;">பாடிய </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் !!</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம்<br />
சித்தவைத்தியத்தையும் தந்த <span style="line-height: 1.8;">எம் தமிழினம் !! </span><br />
<span style="line-height: 1.8;">ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும் </span><br />
<span style="line-height: 1.8;">(கல்)அணைக் கட்டி, </span><span style="line-height: 1.8;">யானை கொண்டு </span><span style="line-height: 1.8;">போரடித்து </span><br />
<span style="line-height: 1.8;">விவசாயம் செய்த </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் !!</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">இன்னும் எண்னில் அடங்கா </span> மேன்மை<br />
<span style="line-height: 1.8;">வாய்ந்த </span><span style="line-height: 1.8;">எம் தமிழினம் இன்று,</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">தன் முன்னே சொந்த சகோத</span>ர<span style="line-height: 1.8;">ர்(ரி)கள் சாக</span>க்<span style="line-height: 1.8;">கண்டும், </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?</div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'<span style="line-height: 1.8;">களையும்,</span><span style="line-height: 1.8;"> 'டாடி'</span><span style="line-height: 1.8;">களையும்,</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
அரவணைத்து கொண்டது <span style="line-height: 1.8;">ஏனோ?</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">தன் </span><span style="line-height: 1.8;">வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய </span><br />
<span style="line-height: 1.8;">வாழ்க்கை முறைக்கு </span><span style="line-height: 1.8;">மாறியது </span><span style="line-height: 1.8;">ஏனோ?</span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">அறிவு மழுங்கி </span><span style="line-height: 1.8;">மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும் </span></div>
<div>
அடிமைகளானது <span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span style="line-height: 1.8;">ஏனோ?</span></span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">தமிழன் என்ற கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து </span><br />
<span style="line-height: 1.8;">தமிழன்</span><span style="line-height: 1.8;"> என்று </span><span style="line-height: 1.8;">சொல்ல</span>க்கூட<span style="line-height: 1.8;"> தயங்குவது </span><span style="line-height: 1.8;">ஏனோ?</span></div>
<div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம் </span> மேன்மையை, <span style="line-height: 1.8;">அறிவை. </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">800 </span><span style="line-height: 1.8;">ஆண்டுகளே </span><span style="line-height: 1.8;">ஆக்கிரமித்த முகலாயர்களிடமும், </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">ஆங்கிலேயர்களிடமும் </span><span style="line-height: 1.8;">பறி கொடுத்து விட்டோமா? </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">இந்நிலை மாற வேண்டாமா? </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">நம் அடிமை மோகம் தனிய </span><span style="line-height: 1.8;">வேண்டாமா?</span><span style="line-height: 1.8;"> </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="line-height: 1.8;">இழந்த மேன்மையை </span>மீட்க <span style="line-height: 1.8;">வேண்டாமா?</span><span style="line-height: 1.8;"> </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்..</div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
விழித்து எழு<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வோம்</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> </span> !! வீறு கொண்டு எழு<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வோம்</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> </span> !!</div>
<div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">தமிழினத்தின் </span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span style="line-height: 28px;">பெருமையை </span></span>ஆராய்ந்து அறிந்து<span style="color: #222222; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 14px; line-height: 19px; text-align: justify;"> </span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span style="line-height: 28px;">உலகினுக்கு உரக்கச் சொல்</span></span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">வோம்</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"> !!. </span></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
இழந்த மேன்மையை அடைவதற்கான<br />
இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!</div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய<br />
இன்னும் பல சாதனை செய்வோம் !!<br />
நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை<br />
காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!<br />
பின் விடியல் பிறக்கும் நம் தமிழுக்கும், நம் தமிழினத்திற்கும் !!</div>
</div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-2025076187456840928.post-46700521292967685072012-07-06T00:00:00.000-04:002013-04-13T18:41:25.479-04:00இல்லறம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">என் நண்பனின் திருமணத்தை முன்னிட்டு நான் எழுதிய கவிதை</span><br />
<br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
<div style="color: #222222; font-family: arial, sans-serif; line-height: normal;">
<br />
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-qOy2YdSbW_s/T_bQbmWHGtI/AAAAAAAABx0/0TkNIcIv8vM/s1600/1804.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="187" src="http://3.bp.blogspot.com/-qOy2YdSbW_s/T_bQbmWHGtI/AAAAAAAABx0/0TkNIcIv8vM/s400/1804.gif" width="400" /></a></div>
<br />
<br />
<div style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="line-height: normal;">இரு கண்களில் ஓர் பார்வைத் தோன்ற, </span></span></div>
<div style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="line-height: normal;">இரு இதயங்கள் ஓர் உணர்ச்சியை உணர, </span></span></div>
<div style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="line-height: normal;">இரு மனதில் ஓர் சிந்தனை உதிக்க, </span></span></div>
<div style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="line-height: normal;">இரு மெய்யில் ஓர் உயிர் வாழத் தொடங்க,</span></span></div>
<div style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="line-height: normal;">இரு பாதை ஓர் பாதையாக, </span></span></div>
<div style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="line-height: normal;">இரு மனம் ஒரு மனமாக,</span></span></div>
<div style="color: black; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;">
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><span style="line-height: normal;">உதயமானது நல்லறமான இல்லறம் !!</span></span></div>
</div>
</div>
</div>
</div>
Srinihttp://www.blogger.com/profile/08072545420550354666noreply@blogger.com6