
பொங்கல் நாள் காலை 5 மணிக்கு "சீனி, எந்திரி time ஆச்சு, சாமி கும்பிட்டு ஊருக்கு கிளம்பனும், நாங்க எல்லாம் பாரு ready ஆயிட்டோம்" என்று சீனியை எழுப்பினார் அவனுடைய அப்பா. ஊருக்கு போறோம் என்ற சந்தோஷத்தில் மட மட என கிளம்பினான் சீனி. மொட்டை மாடியில் சூரியன் உதிக்கும் தருவாயில், மண் சட்டியில் சீனியின் அம்மா பொங்கல் வைக்க, அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கூவினர். பின்னர் 8 மணிக்கெல்லாம் குஜிலியம்பாறைக்கு பயணப்பட்டனர் சீனியும் அவனது குடும்பமும். கோயம்புத்தூர்இல் இருந்து குஜிலியம்பாறை போய் சேர 5 மணி நேரம் ஆகியது. போய் சேர்ந்த உடன் நடந்து கொண்டு இருந்த சேவல் சண்டையை பார்க்க ஓடினான். அப்போது அவனது அப்பா, "சீனி, வந்தவுடன் போகாட்டி என்ன? கொஞ்சம் நேரம் கழிச்சு போ" என்று கூறியும் அப்பாவின் சொல்லை கேளாமல் ஓடினான். சேவல்கள் மோதி கொள்ளும் காட்சியையும், அவை சண்டைக்கு தயார் செய்யப்படும் விதத்தையும் பிரம்மிப்பாக பார்த்து கொண்டு இருந்தான். அதன் பின்னர் தோட்டத்திற்கு சென்று கேணியிலும், வயல்காலிலும் விளையாடலனான். அதன் பின் இருட்ட ஆரம்பித்தால், வீட்டுக்கு திரும்பினான்.அடுத்த நாள் மாட்டு பொங்கல் தினம், சீனியின் சித்தப்பா பொறுப்பேற்று நடத்தும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆகின. சீனி எந்த போட்டியிலும் பங்கேற்க்கவில்லை என்றாலும் அனைத்து போட்டிகளை ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தான். கபடி, 'Slow சைக்கிள்', கல் எறிதல், கண்ணை கட்டி சட்டி உடைத்தல், பாட்டு போட்டி, வினாடி வினா என போட்டிகள் அன்று முழுவதும் நடந்து கொண்டு இருந்தது. அனைத்தையும் ஆர்வமாக பார்த்தான் குறிப்பாக கபடி போட்டியினை மிகவும் ரசித்தான். போட்டிகள் முடிந்து பரிசுகள் கொடுத்தவுடன் அன்றைய தினம் முடிவுக்கு வந்தது.
அடுத்த நாள் காலை 8 மணி, சீனியின் அப்பா - "சீனி, 10 மணிக்கு நாம் கோயம்புத்தூர் கிளம்புறோம்" என்றார். "அப்பா, நாளைக்கு போலாம் அப்பா" என்றான் சீனி. "இல்லை சீனி, உனக்கு school இருக்கு இன்னைக்கு போனா தான் correcta இருக்கும்" என்று அவர் கூற வேறு வழி இல்லாமல் அதை ஏற்று கொண்டான். அன்று காணும் பொங்கல் என்பதால் பேருந்தில் கூட்டம் அலை மோதியது. இதை பார்த்து அப்பா முடிவு மாறாதா? என்று சீனி நினைத்து கொண்டு இருந்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காததால் பேருந்தில் ஏறி கோயம்புத்தூர்க்கு ஆன அவனது பயணம் தொடங்கியது.
"பாம் !! பாம் !!" என்ற 'horn' சத்தம் .
"டேய், என்னடா யோசிச்சுக்கிட்டு இருக்க?, signal போட்டு 5 mins ஆச்சு. Horn அடிக்கிறாங்க, காரை எடு, conferenceக்கு வேற time ஆச்சு" என்று சீனி பக்கத்தில் இருக்கும் அவன் நண்பன் கூற, நினைவு உலக பேருந்து பயணத்தில் இருந்து நிஜ உலக கார் பயணத்துக்கு வந்தான் சீனி, "CovaiVeeran Aviations" என்ற கம்பெனி'இன் CEO. அவனுக்கு வயது 34. "இன்னைக்கு பொங்கல், சின்ன வயசுல எவ்வளவு நல்லா 'celebrate' பண்ணினோம், இப்ப எல்லாம் ஒரு festive spiritae இல்லை. பொங்கல் is just another day" என்று நினைத்து கொண்டே தனது 'BMW' காரினை அழுத்தினான். அந்த கார் சிட்டாக பறந்து 'Concrete jungle'இல் மறைந்தது.
(பின்குறிப்பு - இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே :-))