Tuesday, February 4, 2014

மகிழ்ச்சி

கடலுக்கு நதியின் வருகை மகிழ்ச்சி
கமலிக்கு ஆதவனின் உதயம் மகிழ்ச்சி

மழையோடு வெயில் வானவில்லிற்கு மகிழ்ச்சி
மானிற்கு பசுமையான புல்வெளி மகிழ்ச்சி

நெற்கதிர்க்கு நீரின் வரவு மகிழ்ச்சி
நெசவாளிக்கு பட்டு உற்பத்தி மகிழ்ச்சி

வேழத்திற்கு  இன்சுவை கரும்பு மகிழ்ச்சி
வேதனையுறும் குழந்தைக்கு தாலாட்டு மகிழ்ச்சி

தேனீக்கு மலரின் மலர்ச்சி மகிழ்ச்சி
தேனே, எனக்கோ உன் புன்னகையே மகிழ்ச்சி

9 comments:

  1. ஒவ்வொரு வரியையும் ரசித்து மிகவும் மகிழ்ச்சி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே .. தங்கள் தொடர் கருத்துரைக்கு மிக்க நன்றி

      Delete
  2. உங்கள் வருகை கண்டு எமக்கு மகிழ்ச்சி
    உங்கள் கவிதை கண்டு மேலும் மகிழ்ச்சி
    :) அருமை ஸ்ரீனி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து கண்டு எமக்கும் மகிழ்ச்சி .. மிக்க நன்றி கிரேஸ் :)

      Delete
  3. புன்னகை மலர்கள் பூக்கட்டும் சிறப்பான கவிதை வரிகளைக் கண்டும் வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  4. தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  5. வணக்கம் ஸ்ரீனி !
    வலைச்சரம் வழியாக வந்தேன். ஏற்கனவே வந்துள்ளேன்.
    தேனீக்கு மலரின் மலர்ச்சி மகிழ்ச்சி
    தேனே, எனக்கோ உன் புன்னகையே மகிழ்ச்சி! அருமை அருமை!
    ஆஹா அப்போ அடுத்த தீபாவளி கலக்கலாகவே இருக்கும் இல்லையா. அருமையான கவிதை நன்றி
    தொடர வாழ்த்துக்கள்......!

    ReplyDelete
  6. வணக்கம் இனியா..
    கண்டிப்பாக.. கலக்கிட வேண்டியது தான் !!
    தங்கள் இனிய கருத்துரைக்கு நன்றி :)

    ReplyDelete